தமிழகம் மட்டுமல்லாது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்கும் இசைக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இன்று மிகவும் பிரபலமாகவும் செல்வசெழிப்பாகவும் இருக்கும் ரகுமானின் ஆரம்ப வாழ்க்கையை குறித்து கேட்டால் கண்களில் கண்ணீரே வந்துவிடும். குடும்பத்தில் வருமானம் இல்லாத காலக்கட்டத்தில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து வருமானம் ஈட்டி வந்தார். அப்பொழுது கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் முதலிய இசைக்கருவிகளை வாசிக்க கற்று கொண்டார்.

அதன்பின் தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். தனது 11வது வயதில் 'இளையராஜா' இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்து, பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி தன்னுடைய திறமையை வளர்த்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், முறையாக டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இதையும் படிங்க: என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி..! ஜூனியர் என்.டி.ஆர் நெகிழ்ச்சி பதிவு..!

இதனை அடுத்து, 1992ம் ஆண்டு தனது வீட்டிலேயே "மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர்" அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், சினிமாவில் இசைப்பயணத்தை தொடங்க காரணமாக இருந்தவர் இயக்குநர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மக்களுக்கு பிடித்து போக அதன்பின், இந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து "இசைப்புயல்" என்ற பட்டத்தை மக்களிடம் இருந்து பெற்றார்.

அதன்பின், இவரது உழைப்புக்கு பலனாக, ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றார். மேலும் "ஸ்லம் டாக் மில்லியனியர்" என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதும், 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும், பாஃப்டா விருதும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையையும் தட்டி சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதனை தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் "பத்ம பூசண் விருது" இவருக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான் பேசிய வீடியோவை பார்த்த இணைவாசிகள் அவரை வசைபாடி வருகின்றனர். காரணம் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில், தொகுப்பாளினி டிடி, ரகுமானை பார்த்து பெரிய பாய்யான உங்களது பாடல்களுக்கு போய் யாராவது நொ சொல்லுவார்களா என கேட்க, உடனே ரகுமான் பெரிய பாயா...அது யாரு..? என சிரித்தபடியே கேட்டார். உடனே டிடி நீங்க தான் சார் என கூறியுள்ளார். இதனால் கோபமான ஏ.ஆர்.ரகுமான் வேண்டாம் எனக்கு அந்த பெயர் பிடிக்கலை, நான் என்ன கசாப்பு கடையா வைத்து இருக்கேன் என கூறினார். இதனை பார்த்த இணையவாசிகள் ஏ.ஆர். ரகுமானை பார்த்து கறிக்கடை வைத்து நடத்தினால் என்ன எளக்காரமா, கறிக்கடை பாய் என்றால் கேவலமா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், ஊரே ஏ.ஆர்.ரகுமானை குறித்து வசைபாடி வர, தற்பொழுது உண்மையில் ரகுமான் என்ன பேசினார் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. அதன்படி, தக் லைஃப் பட ப்ரமோஷனுக்காக கொடுக்கப்பட்ட வீடியோவில், "பாட்டு போட்டதுக்கு அப்புறம்" நம்ப பெரிய பாயோட பாட்டுக்கு யாராவது 'நோ' என சொல்லுவார்களா என தொகுப்பாளி கேட்கிறார். உடனே ரகுமான் பெரிய பாயா...அது யாரு என சிரித்தபடியே கேட்டார். உடனே டிடி நீங்க தான் சார் என கூறியுள்ளார். இதனால் ஏ.ஆர்.ரகுமான் வேண்டாம் எனக்கு அந்த பெயர் பிடிக்கலை, அது என்ன சின்ன பாய் பெரிய பாய் என்ற பாகுபாடு என கேட்கிறார். உடனே டிடி, உங்களுக்கு பிடிக்கலையா..? அப்பா சரி..கேமரா மேன் கட் கட் என சொல்லுகிறார்.

இதில் ஏ.ஆர்.ரகுமான் குறுக்கிட்டு என்ன கட் கட்டா..! நான் என்ன கசாப்பு கடையா வைத்து இருக்கேன். கட்டுன்னு சொல்ற மூஞ்ச பாரு என சொல்லி கிண்டலாக சிரிக்கிறார். அப்ப இன்னைக்கே கட் பண்ணுறோம் சார் என சொன்ன படியே டிடி அந்த உரையாயாடலை கேமராமேனை பார்த்து கட் செய்ய சொல்லுகிறார். இப்படி ஏ.ஆர்.ரகுமானின் ஓப்பனிங் வீடியோவை மட்டும் பார்த்து அவரை வசைபாடி உள்ள இணையவாசிகள் இதனை பார்த்த பின் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
இதையும் படிங்க: விஷால் தன்ஷிகாவுக்கு காதல் கல்யாணம்..! விதை போட்டது டீ.ஆர் தான்..!