சினிமா துறையில் இன்று வரை ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஷால், சமீப காலமாக கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒன்று தடுமாறி பேசுகிறார் இல்லையெனில் மயங்கி விழுகிறார் என மக்கள் பரவலாக பேசி வந்தனர். மேலும் அவருடன் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஒரு துணை இருந்தால் அவருடைய வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் பலர் பேசி வந்தனர்.

இப்படி இருக்க, சமீபத்தில் நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், ஆகஸ்ட் மாதம், சினிமா சங்கத்தின் கட்டடத் திறப்பு விழா நடைபெறும் என்றும் அதற்கு பின்பாக தன்னுடைய திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், இயக்குனர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா கதாநாயகியாக நடித்து உருவாகியுள்ள படம் தான் 'யோகி டா'. இப்படம் இன்னும் சில வாரங்களில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால், இயக்குனர் ஆர்.பி உதயகுமார் மற்றும் ராதாரவி என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விஷால் என்ன குழந்தையா... காதலி முன்பாக காதலனை பங்கம் செய்த ராதா ரவி..!

முன்னதாக விஷால் பேசுகையில், நானும் தன்சிகாவும் பல வருடங்களாக காதலித்து வருகிறோம் விரைவில் திருமணம் செய்ய உள்ளோம் என தெரிவித்தார். அவரைப் போல் பேசிய நடிகை தன்ஷிகா, விஷாலைப் பார்த்து, 'என்ன..? பேபி சொல்லிடலாமா' எனக் கூறிவிட்டு, தானும் விஷாலும் காதலிப்பதாகவும், தன்னுடைய எல்லா கஷ்டமான சூழ்நிலைகளிலும் அவர் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், உண்மையில் அவருடைய குணம் குழந்தைத்தனமானது என்றும் முதலில் நண்பர்களாக பேச ஆரம்பித்த நாங்கள் காலப்போக்கில் எங்கள் மனதை ஒருவருக்கொருவர் பறிகொடுத்துக்கொண்டோம் என தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி எங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது என கூறி இனிப்பான செய்தியும் கொடுத்துவிட்டு சென்றார்.

இவர்கள் இருவரது திருமண அறிவிப்பை கேட்ட பின்பு, அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழ ஆரம்புத்தது. என்னவெனில், நடிகர் விஷாலும் நடிகை தன்ஷிகாவும் இதுவரை ஒரு படத்தில் கூட ஒன்றாக நடித்ததே இல்லை என்னும் பொழுது எப்படி இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்ற சந்தேகம் அனைவரையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அதற்கான விடை தற்பொழுது கிடைத்துள்ளது. அதன்படி பார்த்தால், 2017ம் ஆண்டு தன்ஷிகா நடிப்பில் வெளியான 'விழித்திரு' படவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் டி.ராஜேந்தர்.

அப்போது மேடையில் படத்தை குறித்து பேசிய தன்ஷிகா, டி.ராஜேந்தர் பெயரை சொல்லாமல் மறந்து விட்டார். இதனால் கோபமடைந்த டி.ஆர், நடிகை என்றால் மேடை நாகரீகம் தெரியாதா? எவ்வளவு பெரிய நடிகர் என்னை மதிக்காமல் பேசுவதா என மேடையிலேயே அவரை திட்டினார். பின்பு நடிகை தன்ஷிகா கூட்டத்தை பார்த்த பதட்டத்தில் மறந்துவிட்டேன் என கூறி மன்னிப்பு கேட்டார் ஆனாலும் டி.ஆர் ஏற்கவில்லை.

இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பூதாகரமாக வெடிக்க, பல நடிகர், நடிகைகள் அந்த சமயத்தில் தன்ஷிகாவுக்கு ஆதரவாக குரல்கள் கொடுத்தனர். மறந்துட்டாங்க அதுதான் மன்னிப்பும் கேட்டுட்டாங்க அப்பறம் என்ன? என கூறி வந்தனர். இந்த நிலையில், தன்ஷிகாவின் நிலையை பார்த்து நடிகர் சங்க தலைவராக இருந்த விஷால் அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் தான் இருவரும் பேச ஆரம்பித்து பழக்க ஆரம்பித்து பின் நட்பு காதலாக மாறி இன்று திருமணத்தில் வந்து நிற்கின்றனர்.
இதையும் படிங்க: காதலை அறிவித்த விஷால் - சாய் தன்ஷிகா! வைரலாகும் ரொமான்டிக் போட்டோஸ்!