பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் மோனலிசா, உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெரும் கவனம் பெற்றவர். பின்னர், இந்தி திரைப்பட இயக்குனர் மனோஜ் மிஸ்ரா இயக்கிய படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சமீபத்தில் நடிகர் பஹ்ராமான் கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், திருமணத்துக்குப் பிறகு முதன்முறையாக ஊடகங்களிடம் பேசியபோது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தினார்.
கோச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மோனலிசா கூறியவற்றில், குறிப்பாக இயக்குனர் மனோஜ் மிஸ்ராவை நோக்கி கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. டேராடூன், நேபாளம் உள்ளிட்ட பல வெளிநாட்டு மற்றும் மலையடிவார பகுதிகளில் நடந்த படப்பிடிப்பின்போது, மனோஜ் மிஸ்ரா தன்னை மீதான அச்சுறுத்தலான நடத்தை மற்றும் தகாத தொடுதல்களில் ஈடுபட்டதாக மோனலிசா கூறினார். “என்னை பெண்மையை அவமதிக்கும் வகையில் பலமுறை தொட்டார். நான் எதிர்த்து பேச முயன்றால், ‘சினிமாவில் இது சாதாரணம்’ என கூறி என் எதிர்ப்பை மௌனப்படுத்தினார்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், தனது குடும்பத்தினருக்கும் இந்த விவகாரத்தை தெரிவித்தபோது, அவர்கள் பணத்தை மட்டுமே முக்கியமாகக் கருதியதால் தன்னை ஆறுதல் கூறாமல், படப்பிடிப்பு தொடர வேண்டும் என்பதில் மட்டும் வலியுறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். “நான் சந்தித்த துன்பத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. என் குடும்பத்தினர் கூட ‘சினிமாவில் இருந்தால் இப்படி தான் நடக்கும்’ என்று சொல்லி என்னைத் தவறான சூழ்நிலையில் தள்ளிவிட்டார்கள்” என்று மோனலிசா கூறினார்.
இதையும் படிங்க: மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்த விவகாரம்..! வேதனையில் கண்கலங்கியபடி பேசிய சாரா அர்ஜுன்..!
அண்மையில் சில ஊடகங்களில் மோனலிசா குறித்து இயக்குனர் மனோஜ் மிஸ்ரா வெளியிட்ட விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். “இப்போது உண்மையை மறைத்துக் கொள்ள, என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார். நான் திருமணம் செய்துக்கொண்ட பிறகு மக்களிடையே எனது நல்ல பெயர் அதிகரிப்பதை அவர் பொறுக்கவில்லை” என்றார்.

இந்த குற்றச்சாட்டு வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டதுடன், பாலிவுட் துறையில் மீண்டும் ஒரு முறை #MeToo விவாதம் தலைதூக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் குறித்து நடிகர்களின் சங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்து அதிகாரபூர்வ விளக்கம் இன்னும் வெளியாகவில்லை.
மோனலிசாவின் இந்த திடீர் வெளிப்பாடு சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்கள் பெரும்பாலும் அவளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்க, சிலர் இவ்விவகாரத்தில் இருபுறமும் விசாரணை தேவைப்படுகின்றது என கோருகின்றனர். மனோஜ் மிஸ்ரா தரப்பில் இதுவரை எந்த நேரடி பதிலும் கிடைக்காத நிலையில், இந்த விவகாரம் இன்னும் பெரும் விவாதத்தை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.

பலந்து பேசப்படும் பாலிவுட்டின் களங்கமான பக்கத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ள மோனலிசாவின் இந்த சாட்சியம், சினிமா உலகில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது. “உண்மையை வெளிப்படுத்த நான் பயப்படவில்லை. இனி யாரும் இதுபோன்ற அநியாயத்தை சந்திக்கக் கூடாது” என அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உங்களை பற்றி பேச மற்றவர்களுக்கு அருகதை கிடையாது..! இயக்குநர் செல்வராகவன் காட்டமான பேச்சு..!