• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, December 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வீட்டில் விசேஷம்.. ஆனா நடந்ததோ தற்கொலை..! நடிகை ராஜலட்சுமியின் பிரிவால் வாடும் கம்பம் மீனா-வின் உருக்கமான பதிவு..!

    சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜலட்சுமி வீட்டில் விசேஷம் நடைபெற இருந்ததாக கம்பம் மீனா வேதனை தெரிவித்துள்ளார்.
    Author By Bala Sat, 13 Dec 2025 12:13:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kambam-meena-emotional-post-about-serial-actress-tamilcinema

    தமிழ் தொலைக்காட்சி உலகம் கடந்த சில நாட்களாக ஒரு ஆழ்ந்த துயரத்தில் மூழ்கி உள்ளது. சின்னத்திரையில் பல ஆண்டுகளாக பணியாற்றி, தன் இயல்பான நடிப்பாலும், எளிமையான குணத்தாலும் சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் அன்பை பெற்றிருந்த சீரியல் நடிகை ராஜலட்சுமி (ராஜி) அவர்களின் மறைவு, சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக, தற்போது ஒளிபரப்பாகி வந்த “சிறகடிக்க ஆசை” சீரியலில் அருணின் அம்மாவாகவும், சீதாவின் மாமியாராகவும் நடித்திருந்த அவர், கதையில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருந்தார்.  இந்த சோகமான செய்தி வெளியான உடன், அவருடன் இணைந்து நடித்த பல நடிகர், நடிகைகள் தங்களது வருத்தத்தையும், நினைவுகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகை கம்பம் மீனா வெளியிட்ட உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு, ரசிகர்களை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது. இப்படியாக “சிறகடிக்க ஆசை” சீரியல், குடும்ப உறவுகள், பெண்களின் வாழ்க்கை போராட்டங்கள், சமூக அழுத்தங்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபலமான தொடர்.

    kambam meena

    இந்த சீரியலில், ராஜலட்சுமி நடித்த அருணின் அம்மா கதாபாத்திரம், ஆரம்பத்தில் சில மாதங்கள் மட்டுமே திரையில் தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பு மற்றும் முகபாவனைகளால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை அவரது காட்சிகள் தொடர்ந்து வந்த நிலையில், சமீப காலமாக அவர் திரையில் தோன்றாதது ரசிகர்களால் கவனிக்கப்பட்டிருந்தது. இதற்கு பின்னால் இவ்வளவு பெரிய துயரம் மறைந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    இதையும் படிங்க: படையப்பா-2 எடுத்தால்.. கண்டிப்பாக அதில் இருப்பேன்..! கடவுளிடம் ஆசிபெற்ற அடுத்தநொடியில் நடிகர் செந்தில் பேச்சு..!

    குறிப்பாக “சிறகடிக்க ஆசை”க்கு முன்பு, ராஜலட்சுமி “பாக்கியலட்சுமி” சீரியலிலும் நடித்திருந்தார். அந்த தொடரில், பாக்கியாவின் சமையல் குழுவில் ஒருவராக, துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தனது இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கும் தனித்த அடையாளம் கொடுத்தார். பல சீரியல்களில் சிறிய, பெரிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ராஜலட்சுமி, ஒரு கடின உழைப்பாளி நடிகையாகவும், செட்டில் அனைவருடனும் நெருக்கமாக பழகும் நல்ல மனம் கொண்ட மனிதராகவும் அறியப்பட்டவர். இப்படி இருக்க ராஜலட்சுமியின் திடீர் மறைவு செய்தி வெளியானதும், அவருடன் நடித்த பல சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் செய்திகளை பகிர்ந்தனர். “நம்ப முடியவில்லை”, “எப்போதும் சிரித்த முகம்”, “மிகவும் தைரியமான பெண்” போன்ற வார்த்தைகள் பல பதிவுகளில் இடம்பெற்றிருந்தன. அவரை நேரில் அறிந்தவர்களுக்கு, இந்த செய்தி இன்னும் அதிகமாக மன வேதனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நடிகை கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு, மிகவும் உணர்ச்சிகரமாகவும், சோகமாகவும் இருந்தது. ராஜலட்சுமியை “ராஜி” என்று அன்புடன் குறிப்பிட்ட கம்பம் மீனா, தங்களுக்குள் இருந்த நெருக்கத்தை அந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில் அவர், “உன் மகளுக்கு பெரியவள் ஆன நிகழ்ச்சி இருக்கு, பத்திரிக்கை வைக்க வர்றேன்னு சொன்னியே… அதுக்குள்ள உயிரை விட்டுட்டியே ராஜி…” என்று தொடங்கிய அந்த பதிவு, அவருடைய வேதனையை அப்படியே வெளிப்படுத்துகிறது. மேலும் கம்பம் மீனாவின் பதிவில், அவர் ராஜலட்சுமியிடம் கேட்கும் கேள்விகள், ஒரே நேரத்தில் ஒரு தோழியின் வேதனையையும், ஒரு மனித மனத்தின் ஆழ்ந்த வலியையும் காட்டுகின்றன. அதில் “என்ன பிரச்சனை இருந்தாலும், இதுதான் தீர்வா…? நீ எவ்ளோ தைரியமான பொண்ணு… எவ்ளோ போல்டா எல்லாத்தையும் பேசுவ… நான் ஒரு ஆளு, பத்து ஆம்பளைக்கு சமம்னு சொல்லுவியே…” என்ற வார்த்தைகள், ராஜலட்சுமியின் தைரியமான குணத்தை நினைவுகூரும் வகையில் இருந்தன.

    kambam meena

    அந்த பதிவின் மிகவும் சோகமான பகுதி, ராஜலட்சுமியின் மகளை பற்றிய குறிப்புகள் தான். “எம்பொண்ணுக்கு சடங்கு பங்க்ஷனுக்கு இன்விடேஷன் குடுக்கணும், வர்றேன்னு சொன்னியே… இப்ப உன் பொண்ண பத்தி கூட யோசிக்காம இந்த முடிவு எடுத்திட்டியே ராஜி…” இந்த வரிகள், ஒரு தாய் எடுத்த முடிவு, பின்னால் விட்டுச் சென்ற குடும்பத்தின் வலியை எவ்வளவு ஆழமாக பாதிக்கும் என்பதை நினைவூட்டுகிறது. கம்பம் மீனாவின் பதிவு, தனிப்பட்ட துயரத்தை மட்டும் அல்லாமல், சமூக அழுத்தங்கள் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. அதில் “வாழவும் விடாத, சாகவும் விடாத இந்த கேடு கெட்ட சமூகத்துல வாழவே கூடாதுனு முடிவு பண்ணிட்டியா…? ஒருத்தரை மிதிச்சு, ஒருத்தரை கெடுத்து தான் முன்னேறணும்னு நினைக்குற சமூகம் வேணாம்னு இந்த முடிவு எடுத்துட்டியா…?” இந்த வார்த்தைகள், இன்று பல பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், சமூக விமர்சனம், தொழில்சார் அழுத்தங்கள் போன்றவற்றை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன.

    கம்பம் மீனாவின் பதிவில், ஒரு இடத்தில் அவர் கூறிய வார்த்தைகள் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. “எப்படி இருந்தாலும் நீ தைரியமானவள் தான்… ஏன்னா தன் உயிரை மாய்ச்சிக்கிறதுக்கும் தைரியம் வேணும்ல…” இந்த வார்த்தைகள், தோழியின் வேதனையிலிருந்து வந்தாலும், மனித மனத்தின் எல்லையை உணர்த்தும் ஒரு வாக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த உருக்கமான பதிவின் இறுதியில், கம்பம் மீனா, “சரி ராஜி… அங்க போயாவது நிம்மதியா இரு… உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன்…” என்று பதிவிட்டிருந்தார். இந்த வார்த்தைகள், ஒரு நண்பி தனது தோழியை இழந்த வேதனையுடன் சொல்லும் இறுதி பிரார்த்தனையாக இருந்தது.

    இந்த பதிவு வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர். அதே நேரத்தில், பலரும் மனநலம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி பதிவுகள் பகிர்ந்தனர். ராஜலட்சுமியின் மறைவு, மீண்டும் ஒருமுறை மனநல பிரச்சனைகள் குறித்து சமூகத்தில் பேசப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. வெளியில் தைரியமாகவும், உற்சாகமாகவும் தோன்றும் பலர், உள்ளுக்குள் கடும் போராட்டங்களை எதிர்கொண்டு வரக்கூடும் என்பதற்கு இது ஒரு வலி நிறைந்த நினைவூட்டலாக உள்ளது. ஆகவே “சிறகடிக்க ஆசை” சீரியல் நடிகை ராஜலட்சுமியின் மறைவு, ஒரு நடிகையை மட்டும் அல்ல,

    kambam meena

    ஒரு தாய், ஒரு தோழி, ஒரு மனிதரை இழந்த துயரமாக தமிழ் சின்னத்திரை உலகத்தை உலுக்கியுள்ளது. கம்பம் மீனாவின் உருக்கமான பதிவு, அந்த இழப்பின் ஆழத்தையும், நண்பித்தனத்தின் வலியையும் வெளிப்படுத்துகிறது. இந்நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அவரது மகளுக்கும், சக நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ராஜலட்சுமியின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    இதையும் படிங்க: 75-வயதிலும் கம்பீரம்.. காரணம் கடவுள் தான்..! நன்றி சொல்ல குடும்பத்துடன் எங்கே சென்றார் ரஜினிகாந்த்..!

    மேலும் படிங்க
    கணவர் கண் எதிரே அசாம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – ஸ்ரீவைகுண்டம் அருகே பெரும் பரபரப்பு!

    கணவர் கண் எதிரே அசாம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – ஸ்ரீவைகுண்டம் அருகே பெரும் பரபரப்பு!

    தமிழ்நாடு
     காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி

     காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி 'ஆர்டர்லிகள்' இல்லை - பொறுப்பு டி.ஜி.பி அதிரடி

    தமிழ்நாடு
    ராமதாஸ் - அன்புமணி இணைப்பு சாத்தியம் குறைவு; ஜி.கே. மணி மீது பாமக வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு!

    ராமதாஸ் - அன்புமணி இணைப்பு சாத்தியம் குறைவு; ஜி.கே. மணி மீது பாமக வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு!

    அரசியல்
    "காந்தியடிகள் மீதான வன்மம்!" - 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    "காந்தியடிகள் மீதான வன்மம்!" - 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    அருண் ஜெட்லி மைதானத்தில் விண்ணைப்பிளந்த

    அருண் ஜெட்லி மைதானத்தில் விண்ணைப்பிளந்த 'மெஸ்ஸி' முழக்கம்! - ஜாம்பவானை வரவேற்க திரண்ட ரசிகர்கள்!

    இந்தியா
    காங்கிரஸுக்கு‘கை’ கொடுப்பாரா பிரசாந்த் கிஷோர்?... பிரியங்கா காந்தியுடன் நடந்த ரகசிய சந்திப்பின் பரபர பின்னணி...!

    காங்கிரஸுக்கு‘கை’ கொடுப்பாரா பிரசாந்த் கிஷோர்?... பிரியங்கா காந்தியுடன் நடந்த ரகசிய சந்திப்பின் பரபர பின்னணி...!

    அரசியல்

    செய்திகள்

    கணவர் கண் எதிரே அசாம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – ஸ்ரீவைகுண்டம் அருகே பெரும் பரபரப்பு!

    கணவர் கண் எதிரே அசாம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – ஸ்ரீவைகுண்டம் அருகே பெரும் பரபரப்பு!

    தமிழ்நாடு
     காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி 'ஆர்டர்லிகள்' இல்லை - பொறுப்பு டி.ஜி.பி அதிரடி

     காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி 'ஆர்டர்லிகள்' இல்லை - பொறுப்பு டி.ஜி.பி அதிரடி

    தமிழ்நாடு
    ராமதாஸ் - அன்புமணி இணைப்பு சாத்தியம் குறைவு; ஜி.கே. மணி மீது பாமக வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு!

    ராமதாஸ் - அன்புமணி இணைப்பு சாத்தியம் குறைவு; ஜி.கே. மணி மீது பாமக வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு!

    அரசியல்
    அருண் ஜெட்லி மைதானத்தில் விண்ணைப்பிளந்த 'மெஸ்ஸி' முழக்கம்! - ஜாம்பவானை வரவேற்க திரண்ட ரசிகர்கள்!

    அருண் ஜெட்லி மைதானத்தில் விண்ணைப்பிளந்த 'மெஸ்ஸி' முழக்கம்! - ஜாம்பவானை வரவேற்க திரண்ட ரசிகர்கள்!

    இந்தியா
    காங்கிரஸுக்கு‘கை’ கொடுப்பாரா பிரசாந்த் கிஷோர்?... பிரியங்கா காந்தியுடன் நடந்த ரகசிய சந்திப்பின் பரபர பின்னணி...!

    காங்கிரஸுக்கு‘கை’ கொடுப்பாரா பிரசாந்த் கிஷோர்?... பிரியங்கா காந்தியுடன் நடந்த ரகசிய சந்திப்பின் பரபர பின்னணி...!

    அரசியல்
    ஈரோட்டில் மக்கள் சந்திப்பு... தவெக தலைவர் விஜய்க்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

    ஈரோட்டில் மக்கள் சந்திப்பு... தவெக தலைவர் விஜய்க்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share