இந்திய திரையுலகில் நடிகைகள் வரிசையில் பிரபலமாகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றால் அவர் தான் நடிகை நித்யா மேனன். சில நடிகைகளை போல் அள்ளி தெளிக்கும் கவர்ச்சியை ஒரு பொழுதும் காட்டாத நித்யா மேனன் இவ்வளவு ஃபேமஸ் ஆக இருக்க காரணம் அவரது அபார நடிப்பும் அவரது பேச்சுத் திறமையும் அவரது கண்ணசைவில் ரசிகர்களை ஈர்க்கும் வல்லமையுமே என்று சொல்லலாம்.

குறிப்பாக 'ஓகே கண்மணி' திரைப்படத்தில் இவரது நடிப்பு அபாரமாக இருந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் இளைய தளபதி விஜயின் 'மெர்சல்' திரைப்படத்தில் இவருடைய போர்ஷன் அல்டிமேட்டாக இருக்கும். மேலும், "மதராஸி நஹி மதுரவாசி" என சொல்வதும், 'நம்முடைய மொத்த சொத்துக்களை வித்தாவது இந்த ஊரில் ஆஸ்பத்திரி கட்டுவோம்' என சொல்வதாகட்டும், 'நான் மாங்காய் தின்ன நீ தான் காரணம்' என சொல்லிவிட்டு செல்வதாகட்டும், அனைத்தும் பார்க்கவே அழகாக இருக்கும். மேலும் தற்பொழுது நித்யா மேனனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் ட்ரைலரில் இருவரும் கொத்து பரோட்டா போட்டுக் கொண்டே பேசும் காட்சிகள் எல்லாம் அமோகமாக இருக்கிறது.
இதையும் படிங்க: மக்களுக்கு குட் நியூஸ்..! தனது பிறந்த நாளில் மாஸ் அப்டேட் கொடுத்த இளையராஜா..!

குறிப்பாக 'சைக்கோ' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இன்வெஸ்டிகேசனுக்கு செல்லும் அவரது போர்ஷன்கள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவையாகவே உள்ளது. இப்படி கவர்ச்சியை துளி கூட காட்டாமல் தனது திறமையால் முன்னேறி இருக்கும் நடிகை நித்யா மேனன், நடிகை மட்டுமல்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். இப்படிப்பட்ட நித்தியா மேனன் இதுவரைக்கும், 'அதே நேரம் அதே இடம், 180, வெப்பம், ருத்ரா தேவி, ஓ காதல் கண்மணி, ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை, முடிஞ்சா இவன புடி, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ, தீனி, கவனம், திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், வருகின்ற அக்டோபர் மாதம் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படத்திற்காக ரசிகர் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தனியார் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், ரசிகர்களை குறித்து தனது அதிருப்தி கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன்படி அவர் பேசுகையில், "நாங்கள் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அங்கு எங்களைப் பார்க்க ஒரு ரசிகர் பட்டாளமே கூட்டமாக வருவர்.

இப்படி கூட்டங்கள் அதிகமாக இருக்கும் பொழுது, எங்களிடத்தில் கை கொடுப்பதோடு சில ரசிகர்கள் நிறுத்திக் கொள்ளாமல், வேண்டுமென்றே ஒட்டி உரசியபடி நின்று செல்ஃபி எடுக்கிறார்கள். நாகரிகம் கருதி நாங்கள் விலகி நின்றாலும் அதைக் கூட பொருட்படுத்தாமல் நெருங்கி வந்து நிற்கிறார்கள். அவர்களுடைய நினைவில் எங்களை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

நடிகைகள் என்றாலே எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறார்கள் போல. இப்படி போகும் இடமெல்லாம் நாங்கள் நிற்கும் பொழுது எளிதாக வந்து எங்களைத் தொடுபவர்களுக்கு எல்லாம் எங்களைப் பார்த்தால் என்ன பொம்மைகள் போல் தோன்றுகிறதா..? சொல்லுங்கள்" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: இயக்குனர் மணிரத்தினத்திற்கு ஷாக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!