இசையமைப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இளையராஜா, தற்பொழுது வரை பல்லாயிரம் பாடல்களை இசைத்து திரையுலகிலும் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். இவர் இசையமைப்பதுடன் மேடை நிகழ்ச்சிகளிலும் இசைகளை ரசிகர்கள் மனதில் அலைபாய விடுவதில் வல்லவர். அப்படிப்பட்ட இளையராஜா சமீபத்தில் லண்டனில் 'சிம்பொனி' இசையை 1½ மணி நேரம் அரங்கேற்றி, ஆசிய கண்டத்திலேயே சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இளையராஜாவை அடுத்து, லிடியன் நாதஸ்வரத்தை வைத்து இளையராஜா சிம்பொனி அரங்கேற்ற போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு அப்பொழுது விளக்கம் அளிக்கும் வகையில் பேசியிருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா, அதில், "லிடியன் இசையமைத்து காட்டியது சினிமா பிஜிஎம் தான். சிம்பொனி என்றால் என்னவென்று கற்றுக்கொண்டு வா..! என அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தாக பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்து இளையராஜாவை பலரும் சாடினர்.
இதையும் படிங்க: என்னடா இது இளையராஜாவுக்கு வந்த சோதனை..! தள்ளிப்போய்கொண்டே இருக்கும் ராஜாவின் பாராட்டு விழா..!

இதனை பார்த்து மனம் வருந்திய லிடியன் நாதஸ்வரம், பேசியவர்கள் அனைவருக்கும் விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், முதலில் இளையராஜா எனக்கு குரு. அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை, எப்பொழுதும் வெளிப்படையாக பேசும் மனிதன்.ஆனால் மனதில் ஒன்றும் இருக்காது. அவரது பேச்சை கேட்கும் பொழுது கோபம் வரும் ஆனால் அதன் உள்அர்த்தத்தத்தை புரிந்தால் தான் விளக்கம் புரியும். ஆதலால் அவர் சிம்பொனி பற்றி என்னிடம் பேசும்போது, நீயும் கற்றுக்கொண்டு முறையாக சிம்பொனி இசையமைத்து நிறைய விருதுகளை வாங்கு, பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்துவிடு என தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த சூழலில், லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50வது ஆண்டு கால இசை சாதனையை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும், அவர் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதியான இன்று சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா தமிழக அரசு சார்பில் நடைபெறும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்திருந்தார். இப்படி இருக்க, பல்வேறு காரணங்களால் அந்த விழா ஜூன் 2ம் தேதியான இன்று நடைபெறாமல் தள்ளிப்போய் உள்ளது. உண்மையிலேயே ஜூன் மாதம் 3ம் தேதியான நாளை தான் இளையராஜாவுக்கு பிறந்தநாள் என்றாலும் இன்றைய தினம் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் என்பதால் ஒருநாளுக்கு முந்தின நாளான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இளையராஜா.

இப்படி இருக்க, தனது பிறந்தநாளான இன்று மக்களுக்கு இனிப்பான செய்தியை கொடுத்துள்ளார் இளையராஜா. அதன்படி, செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா பேசுகையில், " எனது பிறந்தநாளிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆதலால் வாழ்த்து கூறிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த நாளில் ஒரு இனிமையான செய்தியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்னவெனில், லண்டனில் நான் நிகழ்த்திய சிம்பொனி இசை நிகழ்ச்சியை பலரும் பாராட்டினீர்கள், அந்த சிம்பொனியில் என்னுடன் பயணித்த இசை கலைஞர்களை வைத்து உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து கொண்டு வந்து, ஆகஸ்ட் 2-ம் தேதி, அதே போன்ற இசை நிகழ்ச்சியை உங்கள் முன்பு பிரம்மாண்டமாக நடத்தப் போகிறேன், இந்த மகிழ்ச்சியான இனிப்பு செய்தியை உலகமெங்கும் இருக்கும் எனது கோடானகோடி ரசிகர் மற்றும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

இதனை பார்த்த மக்கள் வரவர உங்களது அனைத்து நிகழ்ச்சிகளும் தள்ளி கொண்டே செல்வதால், இதனையாவது சொன்ன தேதிக்குள் செய்வீர்கள் என நம்புகிறோம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: இசையமைப்பில் சூப்பர் ஸ்டாராக மாறிய அனிருத்..! சம்பள வரிசையில் நம்பர் 1 ஆக வலம் வந்து அசத்தல்..!