இன்றைய காலகட்டங்களில் தனியாக சாதித்து வரும் நடிகர்களுக்கும் வாழையடி வாழையாக சினிமா பிரபலங்கள் வாரிசு வழியாக வரும் நடிகர்களுக்கும் திரை உலகம் மிகுந்த போட்டியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் எவ்வளவு பெரிய திரை பிரபலத்தின் பிள்ளைகளாகவோ உறவினர்களாகவோ இருந்தாலும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதிவில்லை என்றால் அவர்களது சினிமா பயணம் என்பது முடிவுக்கு வந்துவிடும்.

அந்த வகையில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் மக்களுக்கு பல நல்வழிகளை செய்த தலைவராக இருந்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் தேமுதிகவின் தலைவருமாய் இருந்த அவர் தனது கட்சி அலுவலகத்தில் தன்னை தேடி வரும் மக்களுக்கு உணவு கொடுத்து அவர்களை மகிழ்விப்பதில் வல்லவர். உதவி என்று வருபவர்களுக்கு ஒரு நொடி கூட முகம் சுளிக்காமல் அவர்கள் கேட்கும் உதவி செய்யும் அவர் மறைந்தது பலருக்கும் அதிர்ச்சியை அழித்து தான் வருகிறது. இப்படி இருக்க, தனது சினிமா வாழ்க்கையில் பலரை சம்பாதித்த விஜயகாந்த் அவரின் நலனில் அக்கறை காட்டாமல் என்று மக்கள் பணிக்காக ஓட ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து தனது உடலை கவனித்துக் கொள்ளாமல் மக்கள் பணியில் அதிகமாக தீவிரம் காட்டி வந்தார். இதில் தனது உடல் நிலையும் முழுவதுமாக பாதிக்கப்பட்ட விஜயகாந்த் பலகட்ட மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இந்த உலகத்திற்கு பிரியாவிடை கொடுத்துச் சென்றார். அவரது மரணம் பலரையும் வேதனைப்படுத்தியது.
இதையும் படிங்க: விஜயின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்.. பட்டையை கிளப்ப மீண்டும் வருகிறது தளபதியின் ஹிட் படம்..!

இப்படிப்பட்ட நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் சினிமா துறையில் தனது காலடித்தடத்தை பதிக்க நினைத்தார். ஆனால் என்னதான் அவர் கேப்டனின் மகனாகவே இருந்தாலும் அவருடைய படங்கள் வெளியிடுவதில் அவருக்கும் பல சிக்கல்கள் தான் வந்திருக்கிறது. அதன்படி டைரக்டர் அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'படைத்தலைவன்' படத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார். இப்படத்தின் போஸ்டர்களையும் ட்ரெய்லர்களையும் பார்த்தால் விக்ரம் பிரபு ஏற்கனவே நடித்திருந்த 'கும்கி' திரைப்படம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அப்படி உருவான இத்திரைப்படம் வெளியாக பல தேதிகள் குறிக்கப்பட்டு பல சிக்கல்களை தாண்டி தியேட்டர்கள் கிடைக்காமல் படம் வெளியாவதில் சிக்கல் வந்துகொண்டே இருந்தது.

இப்படி இருக்க ,இன்று பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 500 திரையரங்குகளில் 'படைத்தலைவன்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜயகாந்தின் ரசிகர்கள் மட்டுமே வந்தாலும் கூட படம் ஹிட் அடித்துவிடும் என பலரும் பேசப்பட்டு வரும் நிலையில் இத்திரைப்படத்தின் ஃப்ரீ புக்கிங் காட்சியில் படத்தைக் கண்டு களித்த பல பிரபலங்கள் இத்திரைப்படத்தை குறித்து தங்களது புகழாரத்தை சுற்றியுள்ளனர். அதன் படி, இத்திரைப்படத்தை பார்த்த நடிகர் சரத்குமார் அதனைப் பற்றி தனது முதல் ரிவ்யூவை தெரிவித்திருக்கிறார்.

அதன்படி அவர் பேசுகையில், "சண்முக பாண்டியன் நடித்திருக்கும் 'படைத்தலைவன்' படத்தில் மீண்டும் கேப்டனை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலமாக மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அவரைக் கொண்டு வந்திருக்கின்றனர் படக்குழுவினர். சண்முகபாண்டியனின் ஆக்சன் காட்சிகள் எல்லாம் பார்க்கும்பொழுது அப்படியே விஜயகாந்தை பார்ப்பது போல் இருக்கிறது. படத்தை ஏனோதானோவென்று எடுக்காமல் சமூக பொறுப்புடன் கூடிய கதையாக எடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பாக இருக்கிறது. மேலும் கடவுள் நம்பிக்கை வைத்து ஏமாற்றுபவர்களை சுட்டிக்காட்டும் சிறந்த திரைப்படமாக இப்படம் உள்ளது" என பாராட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், " இத்திரைப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது சில முறை நான் சென்று பார்த்து இருக்கிறேன். ஆனால் அப்பொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் இப்பொழுது தான் முழு படத்தையும் பார்த்தேன். படப்பிடிப்பில் சண்முக பாண்டியன் நடித்ததை விட திரையில் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. மேலும் எனது கணவரான கேப்டன் விஜயகாந்த் திரையில் மீண்டும் பார்த்ததை கண்டு எனது உள்ளம் நெகிழ்ச்சி அடைகிறது. அதுமட்டுமல்லாமல் அவரது பிரிவும் என்னை மனம் நோக செய்கிறது.. இருப்பினும் சண்முக பாண்டியன் உழைப்பை இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன்" என எமோஷனலாக பேசி சென்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ராதா ரவி, " உண்மையிலேயே சண்முக பாண்டியன் நடித்திருக்கும் படம் எப்படி இருக்குமோ என நினைத்தேன் ஆனால் படத்தை பார்த்தவுடன் வியந்து போய்விட்டேன். என் கண்முன்பாகத் திரிந்து கொண்டிருந்த இந்தப் பையனா இப்படி நடித்திருக்கிறான் என என்னை யோசிக்க வைத்து விட்டார்.. ஏதோ பேச்சுக்கு சொல்லவில்லை உண்மையாகவே மூன்று முறையாவது இத்திரைப்படத்தை தியேட்டருக்கு சென்று நான் கண்டிப்பாக பார்ப்பேன், நீங்களும் இந்த படத்தைப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும்" என பேசி சென்றார்.

இறுதியாக பேசிய இயக்குனர் செல்வமணி, " உண்மையிலேயே சண்முக பாண்டியன் கேப்டன் விஜயகாந்த் தான். ஏனெனில், அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னை விஜயகாந்தை தான் ஞாபகப்படுத்தியது. இதற்கு மேல் என்ன... அப்பாவுக்கு பையன் தப்பாம தான் பிறந்திருக்கிறார். விஜயகாந்த் போலவே ஆக்சன் காட்சிகள் எல்லாம் பூந்து விளையாடியிருக்கிறார் சண்முக பாண்டியன். இது ஒரு அருமையான படம் தான். இருப்பினும் இத்திரைப்படம் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்" என தெரிவித்துச் சென்றனர்.

இவர்களைத் தொடர்ந்து படத்தைப் பார்த்த பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சண்முக பாண்டியனுக்கும் பிரேமலதா விஜயகாந்த்-க்கும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பல பேரின் உயிரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமானம்..! ஜேம்ஸ் வசந்தன் பதிவால் பதட்டத்தில் மக்கள்..!