சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்க்கு பிறகு உலகநாயகன் கமலஹாசனுக்கு பிறகு இன்று ரசிகர் பட்டாளம் ஒருவரை பின் தொடர்கிறது என்றால் அவர்தான் இளைய தளபதி விஜய். இப்படிப்பட்ட விஜயின் திரைப்படங்களை பார்க்க ஒரு கூட்டமே அலை மோதிக் கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் ஹிட் கொடுத்த இயக்குனர்களின் திரைப்படங்களே, இந்த காலத்தில் தோல்வியுற்று இருக்கும் வேளையில் நடிகர் விஜய் மட்டும் இருந்திருந்தால் எந்த படமாக இருந்தாலும் அது ஓடிவிடும் என்ற மன ஓட்டம் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் நடிகர் விஜய் என்றே கூறலாம்.

இப்படிப்பட்ட விஜய் இன்று மிகப்பெரிய ஸ்டார் ஆக இருக்கிறார் என்றால் அவரது அயராத உழைப்பும் கடந்து வந்த கடினமான பாதை என்று கூறலாம். ஏனெனில் இவர் முதல் முறையாக நடிக்க வந்த பொழுதிலிருந்தே அவருக்கு விமர்சனங்களும் பின்பாக வரத் தொடங்கியது. சில திரைப்படங்கள் அவருக்கு ஏற்றத்தாழ்வுகளை கொடுத்தாலும் படங்கள் ஹிட் கொடுக்கும் பொழுது மகிழ்ச்சியான விமர்சனங்கள் வருவதைப் போல படம் தோல்வியுறும் பொழுதும் மிகவும் மோசமான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும் நேரத்தில் இவருடைய படங்களுக்கு வரும் தடுங்கல்கள் அனைத்தும் புதியதாகவே இருக்கும். ஒருவேளை இவர் படத்தை தடுக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ..என்று சொல்லும் அளவிற்கு நடிகர் விஜயின் திரைப்படங்கள் வரும்பொழுது தடுங்கல்களும் அதிரடியாக வந்து சேரும்.

இப்படிப்பட்ட நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கையில் 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் இத்திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்காவிட்டாலும் இதனை அடுத்து விஜயகாந்த் உடன் இணைந்து 'செந்தூரப்பாண்டி' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் அவரை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது. இதனை அடுத்து 'ரசிகன்' திரைப்படத்தில் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்திய விஜயை மக்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கிய பின்பு அவருக்கு 'இளைய தளபதி' என்ற பெயரை அடைமொழியாக வைத்து ஒரு கூட்டம் பின்பற்ற தொடங்கியது. இப்படிப்பட்ட விஜய் அடுத்தடுத்ததாக பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக்கண்ணா என பல படங்களில் நடித்து 90ஸ் கிட்ஸ்களை தன் கையில் வைக்க உதவியது.
இதையும் படிங்க: பெண் பிள்ளைகள் மீது விஜய் கைபோடுறாரா.. துடுக்காக பேசிய வேல்முருகனை திணறடிக்க செய்த தாடி பாலாஜி..!

அதுமட்டுமல்லாமல் இன்றும் நடிகர் விஜய் பலருக்கும் பிடிக்க காரணமாக இருந்த படங்கள் ஆன குஷி, பிரியமானவளே, ஃபிரண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான், யூத், பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி, பிகில், வாரிசு, மெர்சல் என பல படங்களில் நடித்து இன்று சினிமா துறையில் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வாங்கும் அளவிற்கு மிகப்பெரிய ஸ்டாராக மாறி இருக்கிறார் நடிகர் விஜய். ஆனால் தன்னுடைய சம்பளங்கள் உயரும் இந்த நேரத்தில் எனக்கு இனி சினிமா வாழ்க்கை வேண்டாம். மக்களின் நலன் மட்டுமே போதும் என்று கருத்தில் கொண்டு முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.
அந்த வகையில் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி 'ஜனநாயகன்' திரைப்படத்திலிருந்து முழுவதுமாக விடை பெற்று முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கி இருக்கிறார் நடிகர் விஜய். 2026 ஆவது வருடத்தின் நடைபெறவிருக்கும் தேர்தலில் முதலமைச்சர் சீட்டை பிடிப்பாரா நடிகர் விஜய் என பலரும் தங்களது எதிர்பார்ப்பை அவர் மீது வைத்திருக்கும் இந்த வேளையில் அவர் இல்லாததால் சினிமாவில் படங்களே இல்லை என்ற சூழ்நிலைகள் உருவாகி இருக்கிறது. ஒரு பக்கம் சினிமா இண்டஸ்ட்ரியில் விஜய் இல்லை... மறுபக்கம் எந்த படம் எடுத்தாலும் வெற்றியும் இல்லை என்ற தயக்கத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள் தற்பொழுது பழைய படங்கள் அனைத்தையும் ரீ-ரீலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர்.

ஆகையால் தற்பொழுது சூப்பர் ஸ்டாரின் பாபா, வெளியான பின்பு நடிகர் விஜயின் போக்கிரி, கில்லி, சச்சின் போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்த வகையில், தற்பொழுது விஜயின் குஷி மற்றும் சிவகாசி திரைப்படத்தை மீண்டும் திரையில் காணும் வகையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியில் அவர் நடித்து வந்த ஜனநாயகன் திரைப்படத்தின் கிலிம்ஸ் காட்சிகள் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்து இருக்கும் இந்த வேளையில் மக்களுக்கு மீண்டும் ஒரு ட்ரீட் கிடைத்திருக்கிறது.

அதன்படி, இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் 'மெர்சல்' திரைப்படம். இந்த மெர்சல் திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார் நடிகர் விஜய். பிளாஷ்பேக்கில் வரும் வெற்றிமாறன் கேரக்டரிலும், மிஜிசியனாக வெற்றி என்னும் கேரக்டரிலும், டாக்டராக மாறன் எனும் கேரக்டரிலும் அற்புதமாக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் வெற்றிமாறனாக நடித்திருக்கும் விஜய் எஸ்.ஜே.சூர்யாவை பார்த்து 'டேனி ஒரு நாள் எங்கள் கைகள் ஓங்கும்' எனக் கூறும் காட்சிகளில் தியேட்டரில் உள்ள அனைவரும் கண்கலங்கி நின்ற காட்சிகள் இன்றும் மறக்க முடியாதவை ஆகவே இருக்கிறது. இந்த நிலையில் இத்திரைப் படத்தை மீண்டும் ரீலீஸ் செய்ய முடிவு எடுத்திருக்கிறது அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

அதன்படி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி மக்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் இத்திரைப்படத்தை மீண்டும் ரீ - ரீலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. விஜயின் 51 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த வேளையில் தளபதி விஜயின் பர்த்டே ஸ்பெஷல் என்ற தலைப்புடன் ஜூன் 20-ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் பிடியில் ஜனநாயகன்.. அனுமதி பெற காத்திருக்கும் பட குழுவினர்..!