பார்க்க தாடியும் கசங்கிய துணியுடனும் எங்கு பார்த்தாலும் புன்னகையை காண்பித்து அமைதியாக இருக்கும் இயக்குனர். இவரது ஆரம்ப வாழ்க்கை மிகவும் கடுமையானது தான். இன்றும் தனது உழைப்பால் உயர்ந்து நிற்கும் தனித்திறமையுள்ள இயக்குனர். எப்படி இன்று நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், அட்லீ என இயக்குனர்கள் இருக்கிறார்களோ அவர்களை போல இவரும் ப.ரஞ்சித், சசிகுமார், சமுத்திரகணி போன்ற இயக்குனர்களுடன் இருப்பார்.

இவரது கடுமையான சினிமா பயணத்தின் பொழுது இவர் மீது அதிக நம்பிக்கை வைத்தது இவர் மனைவிதான் அவர் வேலைக்கு சென்று இவரை வெற்றியாளனாக மாற்றினார். அப்படி பட்டவர் தான் வெற்றிக்கே சொந்தமான இயக்குனர் வெற்றிமாறன். வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை என்கின்ற பகுதில் இருந்து தனது சினிமா கனவை நினைவாக்க சென்னையில் அடியெடுத்து வைத்த வெற்றி மாறன், 1999ம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் இயக்குனர் பாலு மஹேந்திரன் இயக்கத்தில் உருவாகி 52 பாகங்களாக ஒளிபரப்பப்பட்ட "காதல் நேரம்" என்ற நிகழ்ச்சியில் அவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்பு, இயக்குனர் கதிரிடம் உதவி இயக்குனராகவும், அவரை தொடர்ந்து இயக்குநர் மஹேந்திராவின் 'ஜூலி கணபதி' மற்றும் 'அது ஒரு கனா காலம்' படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாபுரிந்தார்.
இதையும் படிங்க: பிரபல ஓடிடி தளத்தில் வெளியான "squid game 3"..! ஆரவாரத்தில் ரசிகர்கள்..!

இதனை அடுத்து இயக்குநராக கலம் இறங்க நினைத்த வெற்றிமாறன் 2007ம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து "பொல்லாதவன்" திரைப்படத்தினை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாமல் இன்று பல்சர் பைக் அதிக இளைஞர்கள் கைகளில் இருக்க காரணம் வெற்றிமாறன் தான். அதனை தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு மீண்டும் நடிகர் தனுஷை வைத்து "ஆடுகளம்" என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படம் தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளை வெற்றிமாறனுக்கு பெற்றுத் தந்தது. மேலும் இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன், அடுத்ததாக விசாரணை, வட சென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியும், தேசிய நெடுச்சாலை 4, நான் ராஜாவாக போகிறேன், பொறியாளன் போன்ற படங்களை தயாரித்தும் தமிழ் திரையுலகில் இன்று முக்கிய இயக்குனராக இடம் பிடித்து இருக்கிறார். மேலும் இவர் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் உலகளவில் பிரபலமாகி ஆஸ்கர் விருதிற்கு நேர்முறையாக பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில், இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடக்க அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட அனைவரும் நடித்து வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் 'பறந்து போ' .

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த வகையில், நிகழ்ச்சியின் வேளையில் பேசிய வெற்றிமாறன், "இங்கு உள்ள அனைவரும் படத்தைப் பார்த்து விட்டு பேசுகிறீர்கள். ஆனால் நான் படத்தையே பார்க்கவில்லை. இப்பொழுது நான் எப்படி உணர்கிறேன் தெரியுமா, ஒரு கிளாஸில் இருக்கும் மக்கு ஸ்டூடன்ட் மாதிரி உணருகிறேன். அதனால் எனக்கு என்ன பேசுவது என்று சுத்தமாக தெரியவில்லை. ஆனாலும் இப்படம் இயக்குனர் ராம் படம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உண்மையில் அவர் ஒரு நல்ல கதை ஆசிரியர் தான். அப்படிப்பட்ட அவர், நடிகர் மிர்ச்சி சிவாவை வைத்து படம் எடுக்கிறார் என்பதில் எனக்கு எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை.

இந்த படம் கண்டிப்பாக ஒரு நகைச்சுவை படமாகவே இருக்கும். நீங்கள் வேண்டுமானால் பாருங்க ராமின் இந்தப் படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்." என்று கூறிச்சென்றார்.
இதையும் படிங்க: விநாயகர் கோவிலில் நடிகை த்ரிஷா செய்த வேலையை பாருங்க..! அதிர்ச்சியில் மக்கள்..!