மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் நிரஞ், இந்தியாவில் எண்ணெய் வலத்தை கண்டு பிடிக்கிறார். பின்பு இதனை சரிக்கட்ட பல அரசியல் வாதிகளை தனது கைகளுக்குள் வைக்க நினைக்கிறார். இதில் அவர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய நினைக்கும் வில்லன், ஏழு வருடங்களாக சிறையில் இருக்கும் நாகர்ஜூனாவை வெளியில் எடுத்து பணத்தை பரிமாற்றம் செய்ய திட்டம் தீட்டுகிறார்.

இதற்கு நாகர்ஜுனா திருப்பதியில் உள்ள பிச்சைக்காரர்களை தேர்வு செய்து அவர்களை குளிப்பாட்டி, அவர்களை பெரிய பணக்காரர்களை போல மாற்றி, அவர்கள் மூலமாக பணத்தை பட்டுவாடா செய்ய திட்டம் திட்டுகிறார். பின்னர் வேலை முடிந்த உடனே அவர்களை கொலை செய்ய முடிவு செய்கிறார். இதனை எப்படியோ தெரிந்து கொண்ட தனுஷ் அவர்களிடம் இருந்து தப்பித்து தனது உயிரை காப்பாற்ற போராடுகிறார். இதில் ராஷ்மிக்கா நாகர்ஜூனாவிடம் சிக்கி கொள்வதும் படத்தின் கடைசியில் தனுஷுடன் இணைந்து நாகர்ஜூனாவும் போராடுவதும் படத்தின் அட்டகாசமான காட்சிகளாக உள்ளது. கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!

இப்படி ஒரு கதைக்களத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ள திரைப்படம் தான், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ள திரைப்படம் தான் "குபேரா".

கிட்டத்தட்ட ரூபாய் 102 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஃபேன் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தை தரையில் காணும் மக்கள் அதனுடைய அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட இத்திரைப்படத்தில் தனது, சமீரா கதாபாத்திரம் குறித்து தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் நீளமாக குறிப்பிட்டு இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் வெளியிட்டுள்ள பதிவில், " குபேரா படத்துல சமீரா கேரக்ட்டரை அற்புதமாகியவர் சேகர் கம்முலா சார் தான் .. அவரோட ஏதோ ஒரு விஷயம்தான் என்னை சமீரா மாதிரி கேரக்டரில் நடிக்க வச்சது.. அவர் படத்துல அவருக்கு உண்மையான காதல் எப்பவும் இருக்கும், அதுதான் நான் அவரோட வேலை செய்ய விரும்பினேன்.. எனக்கு வாய்ப்பு கிடைச்சப்போ, நான் போய் அவரிடம் முழுசா சரணடைந்தேன்.. அதனால இன்னைக்கு நீங்க சமீராவக என்னை பாக்குறதுக்கு காரணம் எல்லாம் அவருதான்..

இவ்வளவு அற்புதமான மனிதர்களுடனும், அவ்வளவு சிறந்த நடிகர்களுடனும் நீங்கள் பணியாற்றும்போது.. அவர்களின் நடிப்பை உயர்த்திக் கொள்வது ஒரு பெரிய பெரிய பெரிய பொறுப்பு.. கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளுக்கு நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதை நடிப்பு பெரிதும் சார்ந்துள்ளது.. ஆனால் நடிகர் தனுஷ் சார் போன்ற ஒரு சிறந்த நடிகர் உங்களிடம் இருக்கும்போது, உங்களுக்கு வேறு வழியில்லை.. சாருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களுக்கு இணையாக நடித்தே ஆகவேண்டும். தேவாவுடன் சமீராவாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்..

அதேபோல் நாகர்ஜுனா சார், ஒரு நடிகராகவோ அல்லது ஒரு நபராகவோ வார்த்தைகளால் அவருக்கு ஒருபோதும் நியாயம் செய்ய முடியாது, ஆனால் நான் அவரை உண்மையிலேயே நேசிக்கிறேன், போற்றுகிறேன்.. அவர் மிகச் சிறந்தவர்.. அவரது வாழ்க்கை முறை நியாயமானது.. மிகவும் சிறப்பு வாய்ந்தது.. அது உத்வேகம் அளிக்கிறது. மொத்த குழுவும்.. டைரக்ஷன் துறை ரொம்ப அழகா இருக்குன்னு உங்களுக்குத் தெரியும் நீக்கிபூமி உங்க கூட வேலை செஞ்சது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. நீங்க ரொம்ப ஜாலியா இருக்கீங்க. கேமரா டிபார்ட்மெண்ட்.. நடிகர்கள்.. எல்லாரும் அவங்க கைவண்ணத்துல ரொம்ப நல்லவங்க..எல்லாருக்கும் வாழ்த்துக்கள் காஸ்ட்யூம் டிபார்ட்மெண்ட் காவியா ஸ்ரீராம் மற்றும் டீம்... லைட் டிபார்ட்மெண்ட்.. எல்லாரும் அவங்க பங்கை ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

தயாரிப்பு jhanvinarang உங்களுக்காக ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்களை நினைச்சு பெருமையா இருக்கு asiansunielnarang சார்..நான் ரொம்ப பெருமையா உணர்கிறேன். கடவுளுக்கு நன்றி! உங்க குடும்பத்துக்கு (ரசிகர்களுக்கு) நன்றி... அனைத்து பார்வையாளர்களுக்கும் நன்றி.. அனைவருக்கும் நன்றி.. சமீரா மிகவும் அழகான குழப்பமானவர், நீங்கள் படத்தைப் பார்க்கும்போது நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

குபேரா இப்போது திரையரங்குகளில் உள்ளது, என்னை நம்புங்கள், அது உங்கள் நேரத்திற்கு மதிப்புள்ளது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!