பல யுடியூப் இன்டர்வியூக்களிலும் பல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றிய ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதியினரை பார்த்து, பல ஆண்கள் இப்படி ஒரு மனைவி தனக்கு கிடைக்கமாட்டாரா..? என்று எங்கும் அளவிற்கும் இப்படி ஒரு கணவன் நமக்கு கிடைக்க மாட்டாரா..? என்று பெண்கள் ஏங்கும் அளவிற்கு இன்டர்வியூக்களில் பேசி மகிழ்ந்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் அழகான இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
இப்படி இருக்க, இவர்களது இன்டர்வியூக்களை பார்க்கும் பொழுது ரவி மோகன் மீது அதிக பொசசிவ் உள்ள பெண்ணாகவே ஆர்த்தி ரவியை பார்க்க முடிந்தது. இப்படியான ஒரு ஜோடி பொருத்தம் நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்தவர்கள் தற்பொழுது, ஐயோ... நமக்கு இப்படிப்பட்ட துணையே வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு ரவி மோகனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைவரையும் தோன்ற செய்து உள்ளது.

நன்றாக இருந்த ரவி மோகன் திடீரென ஆர்த்தி ரவியை பிரிய நினைத்து நீதிமன்றத்தில் விவாகரத்திற்கான வழக்கை தொடர்ந்தார். இனி தன்னுடைய வாழ்க்கையில் ஆர்த்தி ரவிக்கு இடமில்லை என்று அறிவித்த அவர், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனைப் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் ரவி மோகன் ஆர்த்திக்கு துரோகம் செய்கிறார் என்றும் அவரது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இல்லாமல் தன் வாழ்க்கையை குறித்து சுயநலமாக யோசிக்கிறார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க: Kenishaa Francise: ஹீரோயின்களை மிஞ்சிய கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த கெனிஷா பிரான்சிஸ்!

ஒருபுறம் இப்படி பேசிக் கொண்டிருக்க, அதனைக் குறித்து கவலைப்படாத ரவி மோகன் திடீரென தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத் திருமண விழாவில் பாடகி கெனிஷாவுடன் ஒரே நிற ஆடையில் தோன்றினார். ஜோடி பொருத்தம் அமோகமாக இருக்கும் வகையில் இருவரும் வந்து இறங்கினர். இதனைப் பார்த்தவுடன் அங்கிருந்த கேமராக்கள் திரும்பியதோடு பலரது கண்களும் அவர்கள் மீது திரும்பியது. இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் உடனே ட்ரெண்டாக, ரவி மோகன் பாடகி கெனிஷாவை காதலிக்கிறார் என செய்திகள் வரத் தொடங்கியது.

இதனைப் பார்த்து பல நாள் மௌனம் காத்த ரவி மோகனின் முன்னாள் மனைவியான ஆர்த்தி ரவி, "ஒரு வருடமாக நீங்கள் அனைவரும் என் மீது வைத்த குற்றத்திற்கு நான் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தேன். ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்து உலகமே தெரிந்து கொள்ளட்டும் தவறு யார் மீது உள்ளது" என அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து பாடகி கெனிஷாவை, இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் நுழைந்து இப்படி ஒரு நல்ல குடும்பத்தையே பிரித்து விட்டாயே என பலரும் வசைபாடி வர, ஒரு கட்டத்தில் கடுப்பான பாடகி கெனிஷா, ஆர்த்தி ரவிக்கு பதில் ஒன்றை கொடுத்தார். அதில் "எப்பொழுதுமே ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளைக் கொண்ட பெண்ணிடம் ஈர்க்க மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும்" என பதிவிட கெனிஷா ரவிமோகனை காதலிப்பது அப்பட்டமாக தெரிந்தது.

இதனை அடுத்து ரவி மோகனுக்காக ஒரு பக்கம் ஆர்த்தி ரவியும் மறுபக்கம் பாடகியும் சண்டையிட்டு கொள்ள, ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக குஷ்பூ, ராதிகா என அனைவரும் குரல் கொடுத்து வந்தனர். இதனைப் பார்த்து கடுப்பான ரவி மோகன் நேற்று தனது அறிக்கையில், என்னமோ அனைவரும் ஆர்த்தி ரவி தான் பாதிக்கப்பட்டார் என்று சொல்கிறீர்களே... உண்மையில் இந்த திருமண பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்றால் அது நான் மட்டும்தான். என் பெற்றோரை கூட சந்திக்க முடியாத அளவிற்கு என்னை தனிமைப்படுத்தினார்.
இந்த திருமண வாழ்க்கை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். என்னுடைய இரண்டு மகன்களை குறித்து யோசித்து தான் நான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். ஆனால் ஆர்த்தி ரவியை விட்டு பிரிய என்ன செய்வது என்று எனக்கு தெரியாத பொழுது என்னுடைய எல்லா கஷ்டங்களிலும் எனக்கு உறுதுணையாக நின்று, அந்த வலியும் வேதனையும் உள்ள வாழ்க்கையிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தவர் பாடகி கெனிஷா தான்.

என்னுடைய வீட்டை என்னிடமிருந்து பறித்துக் கொண்டார்கள், என்னுடைய வாகனத்தை பறித்துக் கொண்டார்கள், என்னுடைய பணங்களை பறித்துக் கொண்டார்கள், வெறும் காலோடு என்னை வெளியே அனுப்பும் பொழுது எனக்கு நடந்த அனைத்து கொடுமைகளையும் கூடவே இருந்து பார்த்தவர் பாடகி கெனிஷா மட்டும் தான். அது மட்டுமல்லாமல் எனக்கு உறுதுணையாகவும் தாயாகவும் என்னோடு நின்றது அவர் ஒருவர் மட்டும்தான்.
ஆதலால் நான் ஆர்த்தி ரவியை விட்டு தான் பிரிகிறேனே தவிர, எனது மகன்களை விட்டு அல்ல, அவர்களுக்கு உண்டான எல்லா நிதி உதவிகளையும் நான் செய்து வருகிறேன் என தெரிவித்தார். மேலும் என்னை புரிந்தவர்கள் கெனிஷாவையும் புரிந்து கொள்வார்கள் என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து ரவி மோகனை குறித்தும் கெனிஷாவை குறித்தும் பலரும் பேசி வர, கடந்த இரண்டு மூன்று நாட்களாக கெனிஷாவின் புகைப்படங்களும் அவருடைய கவர்ச்சி காட்சிகள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது. மேலும் அவரது ஆடையை குறித்து பலரும் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் ஆர்த்தி ரவிக்கு குஷ்பூ, ராதிகா என பல நடிகைகள் ஆதரவு கொடுத்து வந்தாலும், கவலைப்படாத ரவி மோகன் உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லி குளிக்கும் கேப்பில் ஆதரவு தெரிவித்து சென்றிருக்கிறார் சுசித்ரா.

சுசித்ரா அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் "குளிப்பதற்கு முன்பாக இந்த வீடியோவை நான் பதிவிடுகிறேன். முதலாவது எனக்கு புரியாத ஒரு விஷயம் என்றால் ஜெயம் ரவியும் பாடகி கெனிஷாவும் என்ன தவறு செய்தார்கள். சினிமா உலகத்தில் யாரும் செய்யாத பெரிய தப்பையா ஜெயம் ரவி செய்து இருக்கிறார். எல்லோரும் மறைமுகமாக செய்கிறார்கள் ஜெயம் ரவி வெளிப்படையாக செய்து இருக்கிறார் அவ்வளவுதான்.
எவ்வளவு பெரிய அங்கீகாரத்தை பாடகி கெனிஷாவிற்கு ரவி மோகன் கொடுத்திருக்கிறார் அதை போய் இழிவாக பேசுகிறீர்களே. இத்தனை நாள் கெனிஷாவை பற்றி பேசாத ஊடகங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் இன்று அவருடைய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு அதை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் பாடகி ஆண்ட்ரியா ஸ்டேஜ்ஜில் போடக்கூடிய டிரஸ் போலத்தான் பாடகி கணேஷாவும் போடுகிறார்கள். வித்யா வாக்ஸ் வயலில் பாடும் பாடலை தான் இவரும் பாடுகிறார்கள்.

உடனே அவர்களுடைய உடம்பை வைத்து பேசுவது. ரவி மோகனையும் பாடகி கெனிஷாவையும் வைத்து கேலி செய்யும் உங்கள் அனைவருக்கும் வெட்கமாக இல்லை. ஜெயம் ரவி அவருடைய பெயரில் இருந்து ஜெயம் என்பதை எடுக்காமல் இருந்திருக்கலாம். யாருமே தனது பெயருக்கு முன்பாக கிடைத்த ஜெயம் என்பதை எடுக்க மாட்டார்கள். அது உங்கள் தந்தை வைத்தது கிடையாது அது உங்களுக்கு மக்களால் கிடைத்த ஒரு அங்கீகாரம். இந்த வீடியோவினுடைய தொடர்ச்சி வீடியோவை போட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது அதற்கு முன்பாக நான் குளித்துவிட்டு வருகிறேன் பின்பாகப் போடுகிறேன் காத்திருங்கள் " எனக் கூறிவிட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: ஆர்த்தி வேண்டாம் குழந்தைகள் போதும்..! கெனிஷா தான் என் புது துணை - ரவி மோகன் அறிக்கை..!