விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் , எதிர்நிச்சல், ரஜினிமுருகன், காக்கிசட்டை, ரெமோ, டாக்டர், அமரன் என பல வெற்றி படங்களை கொடுத்து மக்களின் கனவு நாயகனாக அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படிப்பட்ட சிவகார்த்திகேயனின், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, மான் கராத்தே, எங்க வீட்டு பிள்ளை, டான், மாவீரன், அமரன் என பல படங்களில் இவரை கண்ட மக்கள் அவரை தங்களது முன்னணி கதாநாயகனாக ஏற்று கொண்டனர். அதற்கு ஈடாக, வெங்கட் பிரபுவின் 'கோட்' படத்தில் நடிகர் விஜய் தனது கையில் இருக்கும் துப்பாக்கியை சிவாவிடம் கொடுக்க, அதனை பெற்று கொண்ட சிவா, உங்களுக்கு இதைவிட பெரிய வேலை இருக்கு, நீங்க அதை பாருங்க இதை நான் பாத்துக்குறேன் என சொல்லி இருப்பார். அன்றிலிருந்து சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.
இதையும் படிங்க: வெளியானது சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தின் கதை...! மகிழ்ச்சியில் எஸ்கே ரசிகர்கள்..!

இதனை தொடர்ந்து தற்பொழுது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவா, ஒன்று, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதராஸி'. அதேபோல், இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'பராசக்தி' படத்தை இயக்கி வருகிறார். அந்த வகையில் இரு படங்களை தன் வசம் வைத்துள்ள சிவாவுக்கு மூன்றாவதாக ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி, தமிழ் திரையுலகில் தற்பொழுது வெளியான "குட் பேட் அக்லி" படத்தை விட அவரது ரசிகர்கள் பெரிதும் நேசிக்க வைத்த மறக்க முடியாத படம் என்றால் "மங்காத்தா". இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் படம் வருகிறது என்றாலே மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாகவே அமையும். காரணம், அந்த அளவிற்கு படம் காமெடியாகவும், நட்பு ரீதியாகவும், காதல் வாழ்க்கையையும் வைத்து அழகாக செதுக்கி இருப்பார். அதுமட்டுமல்லாமல், இவரது படைப்பில் சமீபத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக அவரையே வைத்து, படத்தின் ஆரம்பத்தில் கேப்டன் விஜயகாந்தை காண்பித்து படத்தை அசத்தி இருந்தார். ஆனால் அந்த படத்தை விட எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிட "மாநாடு" படத்தில் "வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு" என்ற டயலாக் மிகவும் ட்ரெண்டானது.

இப்படி இவர் படைப்பில் உருவான அனைத்து படங்களும் ஹிட் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட வெங்கட் பிரபு வாழ்க்கை என பார்த்தால், நம் அனைவருக்கும் தெரிந்த, இசை-இயக்குநர் மற்றும் பாடலாசிரியரான கங்கை அமரனின் மகன் மற்றும் நடிகர், பாடகர் மற்றும் இசை இயக்குநரான 'பிரேம்ஜி அமரனின்' மூத்த சகோதரரும் ஆவார். மேலும், அவரது பெரியப்பா இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது உறவினர்கள் என்று பார்த்தால் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பாடகர் பவதாரிணி.

இப்படிப்பட்டவரின் கோட் படத்தில் தான் சிவகார்த்திகேயன் கையில் விஜய் துப்பாக்கி கொடுத்தார். ஆதலால் விஜயின் கையில் இருந்து துப்பாக்கியை பெற்ற எஸ்.கேவை வைத்தே அருமையான படம் எடுக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட்பிரபு. அதன்படி, தனது இயக்கத்தில் சிவாவை வைத்து படம் இயக்கவுள்ள வெங்கட் பிரபு, படப்பிடிப்பு பணிகளை வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறார். மேலும் இப்படம் மக்களுக்கு பிடித்த வகையில் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.

இப்படம் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருப்பதால் யோசிக்காமல் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பராசக்தி, மதராஸி படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், வெங்கட் பிரபுவின் படத்திலும் எஸ்.கே நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: "திடீர் தளபதிக்கு வந்த திடீர் சிக்கல்".. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..!