நடிகை சௌந்தர்யா என்றால் அனைவரது நினைவுக்கு வரும் பாடல் ரஜினியின் அருணாச்சலம் படமான "மாத்தாடு மாத்தாடு மல்லிகை" பாடலும் நடிகர் விஜயகாந்தின் "சொக்கதங்கம்" படத்தில் வரும் "உன்ன நினைச்சேன் நான் உன்ன நினைச்சேன்"பாடலும் தான். அந்த அளவிற்கு தனது சிரிப்பாலும், குரலாலும், வெட்கத்தின் அழகாலும், நடனத்தாலும் அன்றே பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தவர் தான் நடிகை சௌந்தர்யா. இன்று பல நடிகைகள் நான் தான் லேடி சூப்பர் ஸ்டார் என கூறி கொண்டு சண்டை போட்டு வரும் வேளையில் இவர் மட்டும் இன்று இருந்திருந்தால் காலத்திற்கும் லேடி சூப்பர் ஸ்டாராகவே இருந்திருப்பார். அந்த அளவிற்கு அன்றே கர்நாடகா அரசின் இரு மாநில விருதுகள், 6 பிலிமிபேர் விருதுகள், மற்றும் நந்தி விருதுகளை பெற்றவர்.

இப்படிப்பட்ட நடிகை சௌந்தர்யாவின் உண்மையான பெயர் சௌமியா சத்தியநாராயணா. 1972 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்த இவர், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்க தங்கம், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, அரசியலில் களம் இறங்கிய சௌந்தர்யா,பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளை ஆதரித்தார்.
இதையும் படிங்க: 'லக்கி பாஸ்கரை' ஓரங்கட்டிய 'குடும்பஸ்தன்'..! ஓடிடியில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார வெற்றி..!

பின் இக்கட்சிகளின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கரீம்நகருக்கு விமானம் மூலம் பயணம் செய்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சௌந்தர்யா விபத்தில் சிக்கியதாகவும், இந்த விபத்தில் அவருடைய உடல் கிடைக்கவில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக கூறப்படத்தை கேட்டு அவரது பல கோடி ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இந்த விபத்து நடந்து சௌந்தர்யாவின் சுவடுகள் அனைவரது நினைவில் இருந்து மறைந்த நேரத்தில் அவர் இறப்பு விபத்தல்ல, கொலை என ஆந்திராவை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்து இருப்பது தற்பொழுது இந்தியாவில் பூகம்பத்தை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 'சிட்டிமல்லு' என்பவர் காவல்துறை உயர் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்,"நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தால் நடக்கவில்லை, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். காரணம், சௌந்தர்யாவுக்கு 'ஜல்பள்ளி' என்ற கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை சௌந்தர்யா உயிருடன் இருக்கும்பொழுதே வாங்க வேண்டும் என 'மோகன் பாபு' முயற்சித்ததாகவும், அவர் மறைவுக்கு பின்னும் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தை மிரட்டி, அந்த நிலத்தை சட்டவிரோதமாக மோகன் பாபு ஆக்கிரமித்திருக்கிறார்.

எனவே இந்த நிலத்தை சட்டப்படி மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் எனவும் சௌந்தர்யாவின் 6 ஏக்கர் நிலத்திற்காக தற்பொழுது மோகன்பாபு-வும் அவரது மகன் மஞ்சு மனோஜும் சண்டை போட்டு கொண்டதையும் ஆதாரத்துடன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள சிட்டிமல்லு, நில அபகரிப்பு விவகாரத்தில் மோகன் பாபுவை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த புகாரால் தனக்கு மிரட்டல்கள் வரலாம் என்பதால் தனக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து இந்த புகார் மனுவானது காவல்துறை மட்டுமல்லாது கம்மம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் உதவி ஆணையருக்கும் அனுப்பபட்டுள்ளதால் மோகன் பாபு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். விரைவில் விசாரணைக்கு அழைக்கபடுவார் எனவும் போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஹீரோயின்கள்... சம்பளத்தை உயர்த்தியதால் வேதனையில் தயாரிப்பாளர்கள்..!