பார்க்கவே அப்பாவி போல் தெரியும் இவர்தான் வனிதா விஜயகுமார். ஆனால் இவர் பொறுமையாக இருக்கும் வரை சாதுவான பெண்ணாகவும் மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படுத்தும் பொழுது ஆக்ரோஷமான பெண்ணாகவும் தென்படுவார். இதனாலேயே தமிழ் திரையுலகில் பல ஆண்களே ஒருவரை பார்த்து பயப்படுகிறார்கள்.

இவர் திரையுலகில் சில படங்களை நடித்திருந்தாலும் அவரை ஃபேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் ஏழாவது சீசனில் கவின், லாஸ்ட்லியா, சாண்டி, முகின் ராவ், தர்ஷன், அபிராமி, சேரன், என பலர் கலந்து கொண்டனர். இப்படியாக பலர் அந்த வீட்டிலிருந்தாலும் சண்டை என்றால் ஒரு கை பார்த்து விடலாம் என நினைத்துவிட்டால் இவரது ஒரே ஒரு குரல் மட்டும் தான் அந்த வீட்டில் ஒலிக்கும். அப்படிப்பட்டவர் தான் வனிதா. இப்படிப்பட்ட வனிதா தமிழ் திரையுலகில் பலரது மனதையும் வென்ற நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். மேலும் நடிகர் விஜயுடன் 'சந்திரலேகா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஆனால் பிக் பாஸ்க்கு பின்பாக வனிதாவை அனைவருக்கும் தெரியவர இதுவரை 17 படங்களில் நடித்திருக்கிறார் வனிதா என்ற செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க: ஒரே பதிவில் ரஜினியை கடுப்பாக்கிய ப்ளூ சட்டை மாறன்..! கொதிக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

பின்னர் அவர் நினைத்தபடி பிக்பாஸ்க்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருக்கிறது. அதன்படி வசந்த பாலனின் இயக்கத்தில் உருவான 'அநீதி' என்ற படத்தில் நடித்திருந்தார் வனிதா. ஆனால் அந்தப் படம் ஓரளவிற்கு மட்டுமே வரவேற்பை கொடுக்க, அதற்காக சற்றும் மனம் தளராத வனிதா, நடிகர் பிரசாந்த் ரீஎன்ட்ரி கொடுத்த 'அந்தகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி சினிமாவில் மீண்டும் தனது காலடித்தடத்தை பதித்து ஒவ்வொரு படங்களாக நடித்து தனக்குண்டான பெயரை சம்பாதித்து வரும் வனிதா, ஒரு பக்கம் அயராது உழைத்து வந்தாலும் மறுபக்கம் அவரது மகள் ஜோவிகாவும் சினிமா துறையில் தனது காலடித்தடத்தை பதித்து வருகிறார்.

மேலும் இவரது பேச்சுக்களை குறித்து அதிகமாக மீடியாக்களில் வந்ததைவிட இவரது திருமணங்களை குறித்து தான் அதிகமான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. குறிப்பாக முதலில் 'ஆகாஷ்' என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா அதற்குப் பின் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் ஆகாஷுக்கும் வனிதாவிற்கும் பிறந்த பிரபு சாலமன் தற்பொழுது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். இதனை அடுத்து, நீண்ட நாட்களாக தனிமையில் வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் இரண்டாவதாக 'ராஜன்' என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் கடைசியாக 'பீட்டர் பால்' என்பவரை திருமணம் செய்து தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

இப்படி தனது கெரியரிலும் வாழ்க்கையிலும் அடுத்தடுத்ததாக முன்னேறி வரும் வனிதா விஜயகுமார், தற்பொழுது "மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்" என்ற படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை அவரது மகளான ஜோவிகா தயாரித்து இருக்கிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவரது கையால் வெளியிட்டு இருக்கிறார்.

வனிதா விஜயகுமாரின் படத்தின் பெயரை பார்த்த ரஜினி ஆச்சரியப்பட்டதுடன் அவர்களை அன்போடு அழைத்து படத்தின் வெளியிட்டிற்கான புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி வனிதா நடிப்பில் வெளியாகவுள்ள 'மிஸ்டர் அண்ட் மிஸ்டர்' திரைப்படம் வரும் ஜூலை மாதம் நான்காம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது.
இதையும் படிங்க: 'ராட்சசன்' படம் சும்மா டிரைலர் தான்... மெயின் பிக்சரே 'இரண்டாம் வானம்' படம் தான்....! படக்குழு அதிரடி அப்டேட்...!