போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தத்தைத் தொடர்ந்து கழுகு படத்தின் நாயகன் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
போதை பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், பெசன்ட் நகர் கலாசேந்திரா காலனியில் உள்ள அவரது வீட்டிலும் இன்று காலை போலீசார் இரன்டு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர். அதாவது கிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தனக்கு கல்லீரல் சம்பந்தமான நோய் இருப்பதாகவும், அதனால் தான் போதைப்பொருட்களை பயன்படுத்த வாய்ப்பே கிடையாது என்றும் அடித்துக்கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனது உடல் நலப்பிரச்சனைகளுக்காக நிறைய மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தை கேட்டதுமே தான் போலீசாருக்கு பொறி தட்டி, கிருஷ்ணாவின் வீட்டில் ரெய்டு விட்டுள்ளனர். ஏனெனில் கிருஷ்ணா சொல்வது உண்மை என்றால் அவரது வீட்டில் அவர் பயன்படுத்தி வரும் மருந்து, மாத்திரைகள் இருக்கும் அல்லவா?. இந்த ரெய்டில் ஸ்ரீகாந்த் வீட்டில் சிக்கியது போல் ஒரு கிராம் கொகைன் கிடைக்காவிட்டாலும், அவர் பயன்படுத்தும் மருந்துகள் கிடைத்தால் கூட அதை லேபிற்கு அனுப்பி பரிசோதித்து பார்த்துவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் தான் போலீசார் கிருஷ்ணாவின் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். அவரது கார் மற்றும் வீடுகளில் சல்லடை போட்டு தேடி வரும் நிலையில் முக்கிய பொருள் சிக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆரஞ்சு கலர் பாவாடை சட்டையில் ஆளை மயக்கும் நடிகை அதுல்யா ரவி..!
மற்றொருபுறம் கிருஷ்ணாவின் சோசியல் மீடியா கணக்குகளையும் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்களாம். அதாவது கிருஷ்ணா சோசியல் மீடியா மூலமாக போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு கொண்டிருக்கிறாரா?, ஆன்லைனில் ஏதாவது பணப்பறிமாற்றம் செய்திருக்கிறாரா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இவரது சமூக வலைதள கணக்கு உள்ளிட்டவையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அதாவது ஏதேனும் அந்த போதை பொருள் கும்பலுடன் இவருக்கு தொடர்புள்ளதா அல்லது நடிகர் ஸ்ரீகாந்துடன் என்ன மாதிரியான தொடர்புள்ளது ஏற்கனவே கைது செய்யப்பட்ட அந்த பிரசாத் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரிடன் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா? பணப்பரிவர்த்தனை ஏதேனும் நடைபெற்றதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கிருஷ்ணாவின் செல்போனையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் நோண்டி நுங்கு எடுத்து வருகிறார்களாம். கடந்த 5 ஆண்டுகளாக கிருஷ்ணா யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார். அவர்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எஸ்.எம்.களை தோண்டி துருவி வருகிறார்களாம்.

அப்போது தான் கிருஷ்ணா போதைப்பொருள் கும்பலுடன் கோர்ட்வேர்ட் எனப்படும் சங்கேத மொழியில் பேசியிருக்கலாம் என்ற தகவலை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த கோட்வேர்ட் அர்த்தம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதன் மூலம் எத்தனை லட்சம் பணம் பரிமாறப்பட்டது? யார் யாருக்கெல்லாம் கொக்கைன் உள்ளிட்ட போதை பொருள்கள் வழங்கப்பட்டன? என்பது குறித்தும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்துவிசாரிக்க திட்டமிட்டுள்ளனர். முந்தைய விசாரணையின் போது தனக்கு கடந்து ஆண்டு தான் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்திருப்பதாக கிருஷ்ணா கூறியிருக்கிறார். அதுவும் விசாரணையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தினாரா? அல்லது அதனை விற்பனை செய்ய மட்டும் உதவினாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை கொண்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கோலிவுட்டில் இன்னும் சில டாப் செலிபிரேட்டிகளும் சிக்கக்கூடும் எனற தகவலும் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: நாளை ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்..! குழப்பத்தில் சினிமா ரசிகர்கள்..!