இன்று தங்கம் விலை காலை, மாலை என இரண்டு வேளையும் அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் (02/06/2025):
வாரத்தின் முதல் நாளான இன்றைய காலை நிலவரப்படி, (திங்கள்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொஞ்சம் கொஞ்சமாக ஏறும் தங்கம் விலை.. இன்றைய ரேட் தெரியுமா..?
இந்நிலையில் இன்று மாலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 110 ரூபாய் அதிகரித்து 9,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து 72,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்று சற்று உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா..?