• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    எந்தெந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் புற்றுநோய் வரக்கூடும்.? ஓர் எச்சரிக்கை பட்டியல்.!

    உலகில் புற்று நோய் அதிகரித்து வரும் நிலையில், எந்தெந்த உணவுப் பொருட்கள் புற்று நோயை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது பற்றிய பட்டியல்.
    Author By Jagatheswari Tue, 18 Feb 2025 22:52:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Which food idems vl create cancer.? A warning list

    பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை  கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உணவு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாறிவிட்ட உணவுப் பழக்கம்தான். உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமையும் (ஐ.ஏ.ஆர்.சி.) இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை அந்த அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த உணவு வகைகள் என்னென்ன?

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி

    cancer
    இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 18 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இறைச்சியைப் பதப்படுத்தச் சோடியம் நைட்ரேட், சோடியம் நைட்ரைட் என இரண்டு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இறைச்சியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் இருப்பதாக ஐ.ஏ.ஆர்.சி. வகைப்படுத்தியுள்ளது.


    மைக்ரோவேவ் பாப்கார்ன்


    பாப்கார்ன் சாப்பிடுவது தவறான விஷயமல்ல. ஆனால், மைக்ரோவேவ் பாப்கார்ன் என்றால் எச்சரிக்கைத் தேவை. இந்த வகையான பாப்கார்ன் ‘பெர்ஃப்ளூரெக்டனிக்’ என்ற அமிலத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. இதில் சுவை மற்றும் மணத்துக்காகச் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் சூடாக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைகின்றன. இதைச் சாப்பிடும்போது நுரையீரல் கோளாறு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.


    சுத்திகரிக்கப்பட்ட மாவு

    cancer
    மாவு இல்லாத உணவு வகைகள் மிகக் குறைவு. கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட மாவு வகைகள் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு வெள்ளையாகத் தெரியும் இந்தச் சுத்திகரிக்கப்பட்ட மாவில் ஊட்டச்சத்து ஒரு சதவீதம்கூடக் கிடையாது. மாவை வெண்மையாக்க ‘குளோரின் காஸ்’ பயன்படுத்தப்படுகிறது. இப்படிச் செயற்கையாக வெண்மையாக்கப்படும் மாவுகளில் கிளைசெமிக் அளவு அதிகம், இது ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யக்கூடியது. இன்சுலின் உருவாவதைத் தடுக்கவும் செய்யலாம். இதுபோன்ற மாவு வகைகள் உடலில் புற்றுநோய் செல்களை வளரச் செய்யக்கூடிய சாத்தியம் அதிகம்.


    சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை


    புற்றுநோயை உருவாக்கும் மிகப் பெரிய காரணிகளில் ஒன்று சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை. அதிக அமிலம் உள்ள உணவும் சர்க்கரைதான். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடலில் தொடர்ந்து சேரும் அதிகக் கொழுப்பு, பல வகைப் புற்றுநோய்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.


    உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு

    cancer
    உணவில் உப்பு மிகவும் முக்கியமான ஒரு பொருள். தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பு காரணமாக வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உப்பில் உள்ள ‘ஹெலிகோபேக்டர்பைலோரி’ என்ற பாக்டீரியா, உடல் செயல்திறனை அதிகப்படுத்தக்கூடியது. இதன்காரணமாக வயிற்று எரிச்சல், அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, பின்னர் அதுவே வயிற்றுப் புற்றுநோயாக உருவெடுக்கலாம்.


    சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


    உணவு பொருட்களில் மிக ஆபத்தான ஒன்றாக மாறி வருகின்றன சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள். எண்ணெயைக் கெட்டியாக மாற்ற ஹைட்ரஜன் சேர்க்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் வனஸ்பதி நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது விலை குறைவாக இருப்பதும் அதிகப் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம். இந்த வகையான எண்ணெய் பயன்பாட்டிலிருந்து உடலில் சேரும் கொழுப்பு, மார்பகப் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கலாம்.


    பண்ணை மீன்கள்


    பண்ணை மீன் வளர்ப்பு முறை இன்று பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. இங்கே வளர்க்கப்படும் மீன்களில் ‘பாலிகுளோரி னேனட் பிப்ஹெனைல்ஸ்’ இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள், புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்று. பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களின் வளர்ச்சிக்காகப் பூச்சிக் கொல்லிகள், ஆன்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினொஜென் பொருள் உள்ளது.


    சோடா குளிர்பானம்

    cancer
    ஊட்டச்சத்து எதுவுமில்லாத சர்க்கரை, கலோரிகள் நிரம்பிய மென்பானங்களை பலரும் விரும்பி பருகுகின்றனர். ஆனால், இது உடலுக்கு மிகவும் தீங்கானது. தொடர்ந்து இந்தக் குளிர்பானங்களைப் பருகிவந்தால் இன்சுலின் அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கணையப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். குளிர்பானத்துக்கு வண்ணமூட்டும் சர்க்கரையும் புற்றுநோய் வளர்ச்சிக்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது.
    மரபணு மாற்றப்பட்ட உணவு
    மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படுமா என்ற கேள்விகள் எப்போதும் முன்வைக்கப்படுகின்றன. மரபணு மாற்றப்பட்ட சோளம் பிரான்ஸில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் புற்றுநோய் கட்டிகள், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்


    எண்ணெயில் பொரிக்கப்படும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றில் அக்ரிலமைட் என்ற ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் உடன் தொடர்புடையது. இதே வேதிப்பொருள்தான் புகைபிடித்தலிலும் உள்ளது. உணவில் அக்ரிலமைட் ஏற்படுவதற்கு அதிக வெப்பநிலையில், அது பொரிக்கப்படுவதே காரணம். பொரிக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைந்து உணவில் தேவையற்ற அமினோஅமிலம் உண்டாகிவிடுகிறது.
    சூடான பானங்கள் ஆபத்தா?
    சூடான காபியைப் பருகினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இதை ஆய்வு செய்த புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை (ஐ.ஏ.ஆர்.சி.), சூடான காபியைப் பருகுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று கூறியுள்ளது. ஆனால், எந்த ஒரு திரவ உணவையும் 65 டிகிரி செல்சியஸுக்கு மேலான சூட்டில் பருகினால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளது. சூடான திரவ உணவைச் சாப்பிடும்போது தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
     

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share