விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு ஆக்ஸியம் மையம் ஒன்று அங்கே உருவாக்கப்படுகிறது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது இருக்கும். அந்த மையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்படும்.

ஆக்ஸியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்ட பிறகு இந்த உபகரணங்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு ஆக்ஸியம் மையத்துடன் இணைக்கப்படும். பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடு நிறுத்தப்படும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆக்ஸியம் 3 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.
இதையும் படிங்க: இதெல்லாமா விண்வெளிக்கு எடுத்துட்டு போவீங்க..! சுபான்ஷு சுக்லா கொண்டு செல்லும் ரகசிய பொருள்..!

இந்த பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும். இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா தான் விண்வெளி நிலையத்திற்குச் செல்ல இருக்கிறார்.
உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் பிறந்த சுபன்ஷு சுக்லா, 2019 ஆம் ஆண்டில், சுபன்ஷு சுக்லா விங் கமாண்டர் பதவியை அடைந்து வரலாறு படைத்தார். போர் விமானங்களில் அவருக்கு 2000 மணி நேரத்திற்கும் மேலான அனுபவம் உள்ளது. மிக்-21, எஸ்யூ-30 எம்கேஐ, டோர்னியர், மிக்-29, ஜாகுவார், ஹாக், ஏஎன்-32 உள்ளிட்ட பல வகையான விமானங்களை அவர் ஓட்டியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு விண்வெளி பயணத்தை மேற்கொண்ட ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற உள்ளார்.
இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக இன்று இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் நாளை இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த பணி முதலில் மே 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர். வி. நாராயணன் கூறியதாவது:- Axiom-4 குழுவினர், புதிய ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் பயணிக்க உள்ளனர். இதற்கு முன்பு, இந்தப் பயணம் மே 29-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு, ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், சில தொழில்நுட்பக் காரணங்களால் ஜூன் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.இந்த தாமதம் ஒரு சிறிய பின்னடைவாக இருந்தாலும், விண்வெளிப் பயணத்தின் சிக்கல்களையும், ஏவுதல் நடவடிக்கைகளில் வானிலையின் முக்கியத்துவத்தையும் இது காட்டுகிறது என்றார்.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. இந்த டைம் மிஸ் ஆகாது! விண்வெளியில் தடம் பதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்..!