மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் சோனம் ரகுவன்ஷி (26) தம்பதியினர், மே 11ஆம் தேதி திருமணம் முடிந்து, மே 20ஆம் தேதி மேகாலயாவிற்கு தேனிலவுக்கு புறப்பட்டனர். மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோரா பகுதி முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சோரா என அழைக்கப்படும் சிரபுஞ்சி, உலகில் அதிகளவில் மழை பெய்யும் பகுதியாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சிரபுஞ்சிக்கு ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ராஜா ரகுவன்ஷி, சோனம் தம்பதி இன்ஸ்டாகிராமில் பிரபலமான மேகாலயாவின் உயிருள்ள வேர் பாலங்களை (Living Root Bridges) பார்க்க வேண்டும் என்று இவர்கள் ஆசைப்பட்டனர்.

இந்தோரில் போக்குவரத்து தொழில் செய்யும் ராஜா, பயணத்தை கவனமாக திட்டமிட்டு, ஒவ்வொரு விவரத்தையும் ஆராய்ந்து தயாராக இருந்தார். சிரபுஞ்சிக்கு ஹனிமூன் சென்று அங்கு உற்சாகமாக சுற்றிப்பார்த்தனர். அங்கு ஒரு ஸ்கூட்டரை வாடகை எடுத்துக் கொண்டு சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: ஹனிமூனில் கணவனை போட்டுத் தள்ளிய சூப்பர் மனைவி..! உறைய வைக்கும் மேகாலயா கிரைம்..!
மே 22 அன்று, இந்த தம்பதி மவுலாக்கியாட் கிராமத்துக்கு வந்து, 3,000 படிகள் இறங்கி நோங்ரியாட் கிராமத்தில் உள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் (Homestay) தங்கினர். அடுத்த நாள், மே 23 காலையில், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால், குடும்பத்தினர் கவலையடைந்து, மேகாலயாவுக்கு சென்று உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து தேடுதல் வேலையை தொடங்கினர்.

காவல்துறையினர், தம்பதி வாடகைக்கு எடுத்திருந்த ஆக்டிவா ஸ்கூட்டரை, ஷில்லாங் மற்றும் சோஹ்ரா (செர்ராபுஞ்சி) இடையே உள்ள ஒரு கஃபே அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடித்தனர். இது உள்ளூர் மக்களையும், காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
ஸ்கூட்டரில் உள்ள ஜிபிஎஸ் கருவி, இவர்கள் வெய் சாவ்டோங் (Wei Sawdong) பகுதியை நோக்கி சென்றதாக காட்டியது.
11 நாட்கள் நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஜூன் 2ஆம் தேதி, நோங்க்ரியாட் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெய் சாடாங் நீர்வீழ்ச்சி அருகே, 100 அடி ஆழமான பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலை அடையாளம் காண்பது கடினமாக இருந்தபோதிலும், ராஜாவின் கையில் பச்சைக் குத்தியிருந்த 'ராஜா' என்ற எழுத்தும், அவர் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சும் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின. மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் வெள்ளை நிற சட்டை, உடைத்துபோன செல்போன் கவர், மாத்திரைகளும் கிடந்தன.

கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் சியாம், ராஜாவின் மரணம் ஒரு கொலை என்று உறுதிப்படுத்தினார். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரித்தனர். புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் மேகாலயா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ரகுவன்ஷியின் மனைவி சோனம் என்ன ஆனார்? அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் மாயமான சோனம், மேலும் 3 நபர்களுடன் பிடிபட்டார். அவர்கள் காசிப்பூர் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, சோனமுடன் கைதான நபர்கள்தான், ரகுவன்சியை கொன்றார்கள் என்பதும், ரகுவன்ஷியை கொல்ல சோனம்தான் அவர்களை பணி அமர்த்தினார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

திருமணமாகி ஒரு மாதத்திற்குள் ரகுவன்ஷியை கொல்ல சோனம் திட்டமிட்டது ஏன் என்று விசாரணை நடந்தது. சோனத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சோனத்திற்கும் அவரது தந்தை நடத்திவரும் பிளேவுட் கடையில் வேலை செய்துவந்த ராஜ் குஷாலா என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. சோனத்தைவிட குஷாலா 5 வயது குறைவான இளைஞர் ஆவார்.
கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்த நிலையில் சோனத்திற்கு ராஜா ரகுவஞ்சியுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது கள்ளக்காதலன் குஷாலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக அடியாட்கள் 4 பேருக்கு பணம் கொடுத்துள்ளனர்.
கணவரை சோனம் மேகாலயாவுக்கு ஹனிமூன் அழைத்து சென்றுள்ளார். அங்கு மலைப்பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சேனம் ஏற்பாடு செய்த வைத்து அடியாட்கள் ராஜா ரகுவஞ்சியை கடத்திச்சென்று கொலை செய்துள்ளனர். உடலை சிரபூஞ்சி பள்ளத்தாக்கு பகுதியில் வீசியுள்ளனர்.

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது, கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்தேன். கொலை செய்த போது நேரில் பார்த்தேன்'' என மனைவி சோனம் தெரிவித்தார். கொலையாளிகளின் பயணச் செலவுகளுக்காக தலா ரூ.40,000-50,000 கொடுத்து நிதி உதவி செய்தேன் என்றும் சோனம் தெரிவித்துள்ளார். அதேவேளை, தனது மகள் நிரபராதி என்றும் அவர் ரகுவஞ்சியை கொலை செய்யவில்லை என்றும் சோனத்தின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த வழக்கை திசைதிருப்பவே தனது மகளை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? ஆக்சியம்-4 மிஷன்: விண்வெளி பயணம் 4வது முறையாக ஒத்திவைப்பு..