வேலூர்: தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடையே நேரடியாகச் சென்று உரையாடி வருகிறார். அந்த வகையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் காலை பிரசாரத்தின்போது, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டப் பயனாளியான ஒரு பெண்ணின் வீட்டுக்கு அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றார்.
அங்கு அந்தச் சகோதரியுடன் உரையாடிய ஸ்டாலின், அவர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருவதாகவும், அவரது குழந்தைகள் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததை குறிப்பிட்டார். பின்னர், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பன் திட்டம் குறித்து அவரிடம் கேட்டார்.
“2026 தேர்தலுக்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கப் போகிறீர்கள்? எந்தக் கடையில் வாங்கலாம்?” என்று வீடுகளில் இப்போது பெண்களும் குடும்ப உறுப்பினர்களும் உற்சாகமாக விவாதித்து வருவதாக முதலமைச்சர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் ஓட்டுக்கு குறி!! மாற்றி யோசிக்கும் திமுக! 25 பெண் வேட்பாளர்ககளை களமிறக்க திட்டம்!
“வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக்கலாம். ஆனால், அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் ‘choice’-ஆகத்தான் இருக்க வேண்டும். அவர்கள்தான் இல்லத்து அரசிகள், குடும்பத் தலைவிகள்!” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை… pic.twitter.com/wTgDRFMGcX
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 14, 2026
மேலும், 2026 தேர்தலில் “தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?” என்று கேட்கும்போது அனைவரும் தமிழ்நாடு அணி என்று சொல்வது போல, வீட்டில் இல்லத்தரசி விவாதத்தில் “பெண்கள்தான்” என்று அனைவரும் சொல்ல வேண்டும், பெண்கள்தான் எப்போதும் வெல்ல வேண்டும் என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்தப் பதிவு தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பன் திட்டம், பெண்களுக்கு சுதந்திரமான தேர்வு உரிமையை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டுகின்றனர்.
கலைஞர் கனவு இல்லம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் ஏற்கனவே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், புதிய வாக்குறுதிகள் பெண்களின் வாக்குகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பதிவு தி.மு.க.வின் பிரசாரத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. பெண்களை மையப்படுத்திய திட்டங்கள் மூலம் தமிழகத்தில் பெண் வாக்காளர்களிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தவெக கூட்டணி அமையாததால் தமிழகம் வர மறுக்கிறாரா ராகுல்காந்தி?! கிரிஷ் சோடங்கர் கொடுத்த ரிப்ளை!