உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள தியோரியா பிரசித்நகர் கிராமத்தை சேர்ந்தவர் கில்வான். விவசாயியான இவர் அரியானா மாநிலம் ஷாஹாபாத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் வளர வளர, கணவன் மனைவிக்கிடையே இருந்த அன்யோன்யம் நாளடைவில் குறைந்து போனது. இதனால் இருவருக்குமிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாழ்க்கையை வெறுத்த அப்பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாற, இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் எப்படியோ கணவனுக்கு தெரிய வர, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த பெண் கள்ளக்காதலை கைவிட மறுத்து, அதை வளர்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: திருந்தி வாழ நினைத்த பெண்ணை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன்.. Oyoவில் உல்லாசம் அனுபவித்துவிட்டு வெறிச்செயல்..!

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனது கள்ளக்காதலனை சந்திக்க பெண் சென்றுள்ளார். இதனை அறிந்த பெண்ணின் கணவர் அவளை பின்தொடர்ந்து சென்றுள்ளார். கள்ளக்காதலனும் அந்த பெண்ணும் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கணவர், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக, கள்ளக்காதலனை கடுமையாக தாக்கிய விவசாயி, மனைவியின் மூக்கை கடித்து துப்பிவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வலியால் கதறி துடித்த பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மூக்கை மீண்டும் இணைக்க அறுவை சிகிச்சை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தப்பி ஓடிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலை கைவிட கட்டாயப்படுத்திய கணவன்... உயிருடன் தீ வைத்து கொளுத்திய ‘சைக்கோ’ மனைவி...!