அமெரிக்க இராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், ஜூன் 14 ஆம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு மற்றும் விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, அமெரிக்க இராணுவத்தின் 1775-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் முக்கியமான மைல்கல்.,மேலும் இது டொனால்ட் ட்ரம்பின் 79-வது பிறந்தநாளுடன் ஒத்துப்போவதால் கூடுதல் கவனத்தைப் பெறுகிறது.

இதனிடையே, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு அமெரிக்க இராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட தானே காரணம் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூறி வந்த நிலையில், பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ராணுவ அணிவகுப்பில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படிங்க: என் மனைவியை அசிம் முனீர்.. போருக்கும் இவரே காரணம்.. இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டு!!

அமெரிக்க ராணுவத்தின் மத்திய பிராந்திய தளபதி மைக்கேல் குறில்லா பாகிஸ்தானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ் தீவிரவாதிகளை கொண்டுள்ளதாக அவர் பாராட்டி உள்ளார். அமெரிக்காவின் இராணுவ அணிவகுப்பில் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக பாகிஸ்தான்- சீனா இடையிலான நல்லுறவும் இடம்பெறுகிறது.

பாகிஸ்தானுக்கு சீனா அதிகம் கடன் வழங்கி உள்ள நிலையில், சீனாவை காரணம் காட்டி அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் நள்ளிரவு வைத்துள்ள இந்தியா இந்த நிகழ்வு குறித்து அறிந்து என்ன செய்து கொண்டிருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் மேலும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு என ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை..! பதற்றத்தில் ஷாபாஸ் ஷெரீஃப் அசிம் முனீர்..!