சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்ட மாஸ்டர் பிளான் தற்போது அரங்கேற தொடங்கியுள்ளது. இது வெறும் போர் அல்ல. சீனா உடைய உயிர்நாடியை துண்டிக்கும் ஒரு பொருளாதார யுத்தம். தென் அமெரிக்காவில் வெனிசுலா தொடங்கி மத்திய கிழக்கின் ஈரான் வரை சீனாவோட மிக நெருங்கிய நண்பர்களை அடுத்தடுத்து தகர்த்தெறிந்துள்ளார் ட்ரம்ப். இதனால சீனாவோட 15% எண்ணெய் விநியோகம் இன்னைக்கு கேள்விக்குறியாகியுள்ளது. பெய்ஜிங் உடைய பொருளாதாரம் எந்த நேரத்திலயும் சரிந்து விழக்கூடும் என்ற பயத்தில் ஜி ஜின் பிங் உறைந்து போயுள்ளார்.
வெறும் இரண்டு மாதங்களுக்குள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவோட இரண்டு மிக நெருங்கிய நட்பு நாடுகளை தகர்த்தெறிஞ்சிருக்காரு. இதன் மூலம் சீனாவோட கச்சா எண்ணெய் விநியோக சங்கிலிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கு. கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைப்பிடிக்கப்பட்டார். இப்போ ஈரானோட உயர்மட்ட தலைவர் அலி காமெனி உயிரிழந்துள்ளார். தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் தன்னோட முக்கிய கூட்டாளிகளை இழந்ததை விட சீனாவோட உயிர் நாடியான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கறது தான் பெய்ஜிங்கை நிலை குலைய வைத்துள்ளது.
சீனாவோட கவலை வெறும் எண்ணெய் தட்டுப்பாடு மட்டுமல்ல. அந்த எண்ணெய் சீனாவுக்கு வந்து சேரும் கடல் வழி பாதையும் தற்போது அமெரிக்காவுடைய நேரடி கண்காணிப்பில் உள்ளது. தென் சீன கடலில் இருந்து மலாக்கா ஜலசந்தி வரை அமெரிக்க கடற்படை நிலை கொண்டுள்ள சூழலில் ஈரான் மற்றும் வெனிசுலாவில் ஏற்பட்டிருக்க இந்த ஆட்சி மாற்றங்கள் சீனாவை ஒரு பொருளாதார சிறைக்குள்ள தள்ளி இருக்கு. மாற்று பாதையான ரஷ்யாவை நம்பி இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு சீனா தள்ளப்பட்டிருக்கு. புள்ளி விவரங்களின் படி வெனிசுலாவோட கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பாதிக்கும் மேலானது மற்றும் ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் கடந்த ஆண்டு சீனாவுக்கு தான் சென்றுள்ளது.
இதையும் படிங்க: கடலில் சீனா விரிக்கும் 'பயங்கர' வலை... 1,400 படகுகளுடன் மாஸ்டர் பிளான்... மிரளும் உலக நாடுகள்...!
சீனாவோட மொத்த எண்ணெய் இறக்குமதில் சுமார் 15% இந்த இரு நாடுகளிடமிருந்தே கிடைத்து வந்துள்ளது. பொருளாதார வல்லுநர் ராப் தமல் கூறுவது போல சீனா தான் நுகரும் எண்ணெயை விட மிக குறைவாகவே உற்பத்தி செய்கிறது. எண்ணெய் விலை உயர்வது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை ஓட வைக்க தேவையான நேரடி எண்ணெய் விநியோகம் தடைப்படுவதுதான் சீனாவுக்கு பெரும் ஆபத்து.
இதனால் தான் “ஒரு இறையாண்மை கொண்ட நாட்டோட தலைவரை கொல்வதும் அங்கு ஆட்சி மாற்றத்தை தூண்டுவதும் அப்பட்டமான அத்துமீறல்” என சீன வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவை கடுமையாக கண்டித்துள்ளார். ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஒருங்கிணைந்த வான்வழி தாக்குதல்கள் உலகையே அதிர செய்துள்ளது. இந்த தாக்குதல்கள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பின் பலவீனத்தை அப்பட்டமா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக ஈரான் தன்னோட பாதுகாப்புக்காக சீனாவிடமிருந்து வாங்கிய HQ-9B வான்வெளி பாதுகாப்பு ஏவுகணை தடுப்பு அமைப்பும் சரியாக வேலை செய்யவில்லை.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் சீனாவின் எண்ணெய் ஆயுதம் ஒப்பந்தத்தின் கீழ் இதனை ஈரான் வாங்கியது. அதாவது ஈரான் தனது நாட்டில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் வாங்கும். அதற்கு பதில் சீனா பணம் கொடுக்காமல் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியாகும். இந்நிலையில் எதிரி நாட்டின் ஏவுகணையை சீனாவின் பாதுகாப்பு அமைப்பு தடுக்க தவறியது. ஏற்கனவே, ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய போது இதே HQ-9B வான்வெளி பாதுகாப்பு ஏவுகணை தடுப்பு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இப்போது ஈரானிலும் இது சொதப்பியுள்ளது. ஒருவேளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடைய கூட்டு வான் வலிமைக்கு முன்பு அவசர அவசரமா நிறுவப்பட்ட இந்த தற்காப்பு அரணால் ஈடு கொடுக்க முடியவில்லையா என்ற சந்தேகமும் எழும்பியுள்ளது.
சீனாவால உருவாக்கப்பட்ட இந்த HQ9B ரஷ்யாவின் S300 மற்றும் அமெரிக்காவோட பேட்ரியாட் அமைப்புகளுக்கு போட்டியாக கருதப்படுது. 260 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் பாய்ந்து செல்லும் திறன் கொண்ட இது ஒரே நேரத்தில 100 இலக்குகளை கண்காணிக்கும் வலிமை கொண்டது. சீனாவோட பெய்ஜிங் மற்றும் திபெத் போன்ற முக்கிய பகுதிகளில் இதுதான் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனா ஈரானுக்கு இதனுடைய செயல்பாடு ஏமாற்றத்தையே அளித்துள்ளத்ஹு. ஈரானோட hp 9பி சிஸ்டம் தோல்வி அடைந்தது வெறும் ராணுவ செய்தி அல்ல. இது சீனாவுக்கு ஒரு மிகப்பெரிய அவமானம். உலக நாடுகளுக்கு தன்னோட ராணுவ தளவாடங்களை விற்க துடிக்கும் சீனாவுக்கு மேட் இன் சைனா பாதுகாப்பு கவசங்கள் அமெரிக்காவோட அதிநவீன ஏவுகணைகளுக்கு முன்னால் வெறும் பொம்மைகளே என்பது நிரூபணமாகியுள்ளது.
வெனிசுலா, ஈரான் அடுத்தது வடகொரியாவா அல்லது சீனாவே நேரடி இலக்கா? ட்ரம்போட இந்த அதிரடி ஆட்டம் உலக வரைபடத்தையே மாற்றி எழுத வைக்குது. சீனா தன்னோட பொருளாதாரத்தையும் தன்மேட் இன் சைனா பாதுகாப்பு கவசங்களை விட அமெரிக்காவோட அதிரடி தாக்குதல்கள் பல மடங்கு வலிமையானவை. தன்னோட சொந்த பாதுகாப்புக்காக இதே ஹெச் க்யூ9பி சிஸ்டத்தை தான் நம்பி இருக்கிற சீனா. இது ஒரு மிகப்பெரிய அபாய எச்சரிக்கை. இப்போது தன்னோட எரிசக்தி விநியோகம் துண்டிக்கப்படுவதை சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா? அல்லது ஒரு மிகப்பெரிய பதிலடிக்கு தயாராகுமா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: ARREST..! சிக்கிய திமுக கவுன்சிலர்..!! இண்டிகோ விமானத்தில் பனிப் பெண்ணிடம் அத்துமீறல்..!!