அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளது.,அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அவரது கடுமையான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்தச் சூழலில், டிரம்பின் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்ற வலியுறுத்தல் ஈரானை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கி உள்ளது. இது தொடர்பாக தனது திட்டவட்டமான கருத்தை தெரிவித்துள்ள டிரம்ப், ஈரான் மீதுள்ள வான்வெளியை முழுமையாகவும் முழுமையாகவும் கட்டுப்படுத்தி விட்டதாகவும், ஈரானிடம் நல்ல ஸ்கை டிராக்கர்கள் மற்றும் பிற தற்காப்பு உபகரணங்கள் இருந்தன, அவை ஏராளமாக இருந்தன, ஆனால் அது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, கருத்தரிக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்.. 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்..!

பழைய நல்ல அமெரிக்காவை விட வேறு யாரும் இதைச் சிறப்பாகச் செய்யவில்லை இன்று தெரிவித்துள்ள அவர் உச்ச தலைவர் என்று அழைக்கப்படும் அய்யதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்., அவர் ஒரு எளிதான இலக்கு என்று தெரிவித்துள்ளார். அவர் பாதுகாப்பாக தான் இருக்கிறார் என்றும் அவரை நாங்கள் குறைந்தபட்சம் இப்போதைக்கு கொல்லப் போவதில்லை ஆனால் பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

எங்கள் பொறுமை குறைந்து வருகிறது என்றும் முழுமையாக சரண் அடைய வேண்டும் என்றும் ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!