ஜனவரி 20, 2025-டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானார். அவர் பதவியேற்றவுடன், சட்ட விரோத குடியேறிகள் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறார். அவர் மேடையில் மேசும்போது, “நாங்கள் பயங்கரமான குற்றவாளிகளை வெளியே அனுப்புகிறோம்.நீங்கள் கற்பனை செய்வதை விட இவர்கள் கொலைகாரர்கள்'' என தெரிவித்தார். அவர் பதவியேற்ற 16 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 5 மதியம். அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ்ஜி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் பிரமாண்டமான சி-17 க்ளோப் மாஸ்டர் விமானம் தரையிறங்கியது.
அங்கிருந்து அனுப்பப்பட்ட இவர்கள் அமெரிக்கக் கனவை நனவாக்கியவர்கள் அல்ல. 104 இந்தியக் குடியேற்றவாசிகள், டிரம்ப் நிர்வாகத்தால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான ஆபத்தான, சட்டவிரோத பாதையான கழுதை பாதையை தேர்ந்தெடுத்து சென்றவர்கள். இவர்களில் தலா 33 பேர் ஹரியானா, குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். தலா 3 பேர் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் சண்டிகர். அவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாக இந்தியாவை விட்டு வெளியேறி, சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று பிடிபட்டவர்கள். ஏன் இந்தியர்கள் அமெரிக்கா செல்லும் ஆர்வத்தை இழக்கவில்லை? அங்கு செல்வதற்கு மக்கள் என்ன முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்? அவர்கள் அடைந்தாலும், அவர்கள் எந்த வகையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்?

ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன், ட்ரம்ப் லேகன் ரிலே சட்டத்தில் கையெழுத்திட்டார். இது அமெரிக்க அதிகாரிகளுக்கு எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ள சட்டவிரோத குடியேறிகளை தடுத்து வைத்து நாடு கடத்துவதற்கான உரிமையை வழங்கியது. இதற்குப் பிறகு, 15 லட்சம் சட்டவிரோத குடியேறிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 20,407 இந்தியர்களும் அடங்குவர். இதில் சுமார் 17 ஆயிரம் இந்தியர்களை வெளியேற்ற இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியேற்றத் துறையால் அதாவது ஐ.சி.இ. பியூ ஆராய்ச்சி மையத்தின் 2022 படி, சுமார் 7.25 லட்சம் சட்டவிரோத இந்தியக் குடியேறிகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கை சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: பிப்ரவரி 13 மோடி - டிரம்ப் சந்திப்பு..! இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன..?
இந்தியர்களுக்கு மிகவும் பிரபலமான இரண்டு சட்டவிரோத வழித்தடங்களில் செல்கிறார்கள். சுற்றுலா, தற்காலிக விசாவில் செனல்பவர்கள் திரும்பி வருவதில்லை. கழுதை பாதையில் செல்வது மிக நீண்ட, ஆபத்தான பயணம். இந்த வழியில் அமெரிக்க கனவை உயிரைப் பணயம் வைத்து அடைய முயற்சிக்கிறார்கள்.
இப்படி அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோர் மிகவும் ஏழ்மையான வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் அமெரிக்காவின் விசா அவர்களுக்கு வாழ்க்கைக் கனவாக மாறுகிறது. குறைந்த கல்வி அறிவு, பலவீனமான ஆங்கில அறிவுடன் செல்கிறார்கள். அப்படிச் செல்லவே 80 லட்சம் வரை கட்டணம் வரை ஏஜெண்டுகளிடம் செலுத்துகிறார்கள். ஆபத்தான நீண்ட கழுதை பாதையில் அவர்களை அமெரிக்கா அழைத்துச் செல்வதாக ஏஜெண்டுகள் உறுதியளிக்கின்றனர். இந்தத் தொகையைத் திரட்ட, பலர் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். பெரும் கடன் வாங்குகிறார்கள்.

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான எளிதான வழியாக கனடா மாறிவிட்டது. அமெரிக்காவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள கனடா, இப்போது இந்தியர்களுக்கு எளிதான நுழைவு வாயிலாக மாறியுள்ளது. அமெரிக்க விசாவிற்கு ஒருவர் காத்திருக்க வேண்டியிருக்கும் போது, கனடாவிற்கான வருகையாளர் விசாவை வெறும் 76 நாட்களில் பெறலாம். பெரும்பாலான இந்திய புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் தெற்கு எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.
சில நேரங்களில் கழுதை பாதையில் இலக்கை அடைய மாதங்கள் ஆகும். இதில், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக லாரி, விமானம், படகு, கால்நடையாகவோ, காடு வழியாகவோ செல்கின்றனர். இந்த நேரத்தில் அவர்கள் மோசமான வானிலை, பசி, நோய், துஷ்பிரயோகம் மற்றும் சில நேரங்களில் மரணத்தை கூட சந்திக்க வேண்டியிருக்கும். கழுதை வழித்தடத்தை ஏற்க, ஆள் கடத்தல்காரர்களிடம், பல லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. மனித கடத்தல்காரர்களும் இந்த வேலையை ரகசியமாகவும் சட்டவிரோதமாகவும் செய்கிறார்கள்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வாய்ப்புகள் குறைவாக இருப்பது அமெரிக்காவை நோக்கி ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணம். காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி, 2023-24ல் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 12% க்கும் அதிகமாக இருந்தது. இதற்கு நேர் மாறாக, அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 60,000 முதல் 65,000 டாலர்கள் (தோராயமாக ரூ. 51-56 லட்சம்). இந்திய-அமெரிக்க குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் $1.45 லட்சம் (சுமார் ரூ. 1.25 கோடி). அமெரிக்க குடும்பங்களின் சராசரி வருமானம் $70,000 ஆகும்.
சட்டவிரோதமாக அமெரிக்காவை அடைவது எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அதைவிடப் பெரிய போராட்டமாக அங்கேயே தங்கிவிட வேண்டும். கழுதை பாதை, வேறு ஏதேனும் சட்டவிரோத பாதை வழியாக அமெரிக்காவை அடையும் இந்தியர்களுக்கு வாழ்க்கை எளிதானது அல்ல.
அமெரிக்காவை அடைந்தவுடன் முதல் சவாலாக இருப்பதே வாழ்க்கை நடத்துவதுதான். போதிய ஆவணங்கள் இல்லாததால், இவர்கள் உணவகங்களில் பாத்திரம் கழுவுதல், கட்டுமான பணியிடங்களில் வேலை செய்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளை செய்கின்றனர்.
கடைகளில் பேக்கேஜிங்,குறைந்த ஊதியத்தில் காசாளர் போன்ற வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல இந்தியர்கள் டெலிவரி வேலைகளையும் செய்கிறார்கள். அங்கு அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன.
நாடு கடத்தப்படுவோம் என்ற பயம் எப்போதும் இருக்கும். குடிவரவு அதிகாரிகள், காவல்துறை அவர்களை எந்த நேரத்திலும் பிடிக்கலாம். ஒரு தவறான நடவடிக்கை அவர்களை இந்தியா திரும்ப வைக்கும். அவர்கள் சட்ட அந்தஸ்து இல்லாமல் இருப்பதால், முகவர்கள், முதலாளிகள், நில உரிமையாளர்கள் பெரும்பாலும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறைந்த ஊதியம், அதிக வேலையுடன் சிரமப்படும் அவர்களிடம் சில சமயங்களில் பணம் பறிக்கிறார்கள். 
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்க சமூகத்தில் இணைந்து வாழ முடியாது. சமூகப் பாதுகாப்பு இல்லாததால் வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதில் சிரமம் இருப்பதால், பணமாக பரிவர்த்தனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மெடிக்கல் எமர்ஜென்சி என்றால், மருத்துவமனைக்குச் செல்ல பயப்படுகிறார்கள். ஏனென்றால் அங்கேயும் ஆவணங்களைக் கேட்கலாம்.
ஆவணங்களுடன் சென்று வேலை பார்ப்பவர்கள் எப்படியாவது கிரீன் கார்டு, குடியுரிமையைப் பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால் சட்டவிரோதமாக செல்பவர்கள் வாழ்நாள் முழுவதும் ரகசியமாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத குடியேறிகளை பயங்கரவாதிகளுடன் சிறையில் அடைக்கத் திட்டம்… கொலை நடுங்க வைக்கும் டிரம்ப்..!