பேப்பர் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்ட்ராக்கள் சரியாக இல்லை, பயன்பாட்டுக்கு சரிவராது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அதிபர் ட்ரம்ப் திரும்பப் பெற்றார். அதிபர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்திலேயே பேப்பர் ஸ்ட்ராக்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார்.
2019ம் ஆண்டு தேர்தலின்போது, ட்ரம்ப் பிராண்ட் பிளாஸ்டிக் ட்ராக்கள் 10 எண்ணிக்கையிலான பாக்கெட் 15 டாலர்களுக்கு விற்கப்பட்டன. ஆனால், ஜோ பிடன் அதிபராக வந்தபின் பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதித்தார். உணவகங்கள், ரெஸ்டாரண்ட்கள், விடுதிகளில் பிளாஸ்ட் ட்ராக்களை பயன்படுத்தக்கூடாது என்று அமெரிக்க அரசு கட்டுப்பாடு விதித்தது.

அதிபர் ட்ரம்ப் கூறுகையில் “ பிளாஸ்டிக் ட்ராக்கள் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிப்பவை என்று சொன்னாலும் என்னைப் பொருத்தவரை பயன்படுத்தலாம். என்னைப் பொருத்தவரை பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் கடலில் கலந்து திமிலங்களை பெரிதாக பாதிக்காது என்று நினைக்கிறேன், கடலுக்கும் பெரிதாக பாதிப்பு வந்துவிடாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹமாசுக்கு நரகம் காத்திருக்கு..பிப்.15-க்குள் விடுவிக்காவிட்டால்? ட்ரம்ப் எச்சரிக்கை..!
அமெரிக்காவின் பல மாகாணங்கள், நகரங்கள் பிளாஸ்டிக் ஸ்டார்க்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன, வாடிக்கையாளர்களுக்கு பெரும்பாலும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை வழங்குவதில்லை.
உலகளவில் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் கடலில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு லாரி லோடு அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்து மாசு ஏற்படுத்துகின்றன.

இதில் பிளாஸ்டிக் பேக், டூத்பிரஸ், பாட்டில், உணவு பேக்கிங் பிளாஸ்டிக் என பலவகை அடங்கும். இதுதவிர சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள், பொருட்களை மீன்கள் சாப்பிடும்போது அவற்றின் வயிற்றுக்குள் சென்று விரைவில் உயிரிழக்கின்றன அதை உண்ணும் மனிதர்களுக்கும் கேடுவிளைவிக்கிறது. பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிப்பவை ஆபத்தானவை.
90 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பதி கழிவு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவால் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான டன் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் சேர்கின்றன. உலகளவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களில் இருந்து பேப்பரால் செய்யப்பட்ட ஸ்ட்ராக்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், அதிபர் ட்ரம்ப்ரின் இந்த முடிவு உலகின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிபர் ட்ரம்ப் உத்தரவை வரவேற்றுள்ளன.
அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 3.90 கோடி ட்ராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மண்ணில் கொட்டப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் மக்கிப் போவதற்கு 200 ஆண்டுகளாகும், சூழலுக்கும், கடல்ஆமைக்கும், வனவிலங்குகளுக்கும் மிகப்பெரிய ஆபத்தை பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்படுத்தும். ஆனால், உலகில் தினசரி 40 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகிறது.
அதில் 40 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களை பேக்கங் செய்யப் பயன்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக்கை அதிகளவில் பயன்படுத்துவதில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி நாடுகள் முன்னிலையில் உள்ளன. பேப்பர் ஸ்ட்ராக்களை பயன்படுத்தும்போது அதன் செலவு அமெரிக்க அரசுக்கு அதிகமாகிறது. தனியாருக்கும் செலவாகிறது, நுகர்வோரின் பணம் தேவையின்றி வீணாகிறது. ஆனால், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் சிக்கனமானது என்பதால் அதை அதிபர் ட்ரம்ப் ஊக்குவிக்கிறார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாலஸ்தீனியர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.. காசாவை கைப்பற்றுவோம்.. டிரம்ப் சூளுரை..!