இன்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக 2022ம் ஆண்டு முழு சந்திர கிரகணம் நடைபெற்றது. அப்போது சந்திரன் தனித்துவமான சிகப்பு நிறத்தில் காட்சியளித்தது. பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது வானில் நிகழ்வும் மாற்றமே சந்திர கிரகணமாகிறது.

இந்த நேரத்தில் சந்திரன் நகர்ந்து பூமியின் நிழலுக்குள் நகர்கிறது. இந்த சந்திர கிரகணத்தில் நிலவு முழு ரத்த நிறத்தில் காட்சியளிப்பதால் இது ரத்த நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று காலை 9.29 மணிக்கு தொடங்கி மதியம் 12.28 மணிக்கு உச்சத்தை அடையும். பின்னர் மாலை 3.30 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 45 மொழிகளில் திருக்குறள்... டிஜிட்டல் மயமாகும் ஓலைச்சுவடிகள்...தமிழுக்காக பட்ஜெட்டில் பல கோடிகள் ஒதுக்கீடு....!

இந்தியாவில் காலையில் சந்திர கிரகணம் நிகழ்வதால் கண்களுக்கு புலப்படாது. ஆனால் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆர்டிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் கிழக்கு ஆசியா பகுதிகளில் இன்று நிகழும் சந்திர கிரகணம் கண்களுக்கு புலப்படும். கிரகணம் என்றால் இருள் என்று பொருள் கொள்ளப்படும்.
சந்திர கிரகணம் சந்திரன் என்றால் நிலா இருளில் இருப்பதாக பொருள்படும். அதாவது, சந்திரன் இருளில் மூழ்க போகிறது என்றும் மறைய போகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: சிறுபான்மையினரை குறி வைத்து தாக்குகிறது பாஜக..! அகிலேஷ் ஆவேசம்..!