இந்திய ராணுவத்தின் தரைப்படை வலிமையைப் பலமடங்கு உயர்த்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு நடவடிக்கையாக, அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற அதிநவீன 'ஜேவலின்' (Javelin) ரகக் கவச எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான ராணுவ ஒப்பந்தத்தில் இந்தியா அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு மற்றும் நவீனப் போர்க்களச் சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் முப்படைகளையும் நவீனமயமாக்கும் பணிகளை இந்தியா போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களான ஆர்டிஎக்ஸ் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் 'ஜேவலின்' ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான இறுதி ஒப்பந்த நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

ராணுவ வல்லுநர்களால் 'ஃபயர் அண்ட் ஃபர்கெட்' என வர்ணிக்கப்படும் இந்த ஜேவலின் ஏவுகணைகள், எதிரிகளின் அதிநவீன கவச வாகனங்கள், பதுங்கு குழிகள் மற்றும் கனரக பீரங்கி வண்டிகளைத் தரையிலிருந்தே துல்லியமாக வழிநடத்திச் சென்று நொடிப்பொழுதில் சுக்குநூறாகத் தகர்க்கும் அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். தோளில் சுமந்து சென்று எளிதாக ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள், எதிரி வாகனங்களின் மேற்பகுதியைத் தாக்கி அழிக்கும் அதீத திறன் கொண்டவை.
இதையும் படிங்க: ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் ஒரு பகுதி! அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இந்த அதிநவீன 'ஜேவலின்' ஏவுகணைகள் இந்திய ராணுவக் கட்டமைப்பில் இணைக்கப்படுவதன் மூலம், கடினமான மலைப்பகுதிகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் இந்தியப் படைகளின் தாக்குதல் திறன் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொடும் எனப் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் தவெக..! வெயிட் பண்ணுங்க... அமைச்சர் ஷாஜகான் திட்டவட்டம்..!