உலகில் 20 சதவீததிற்கும் அதிகமாக கச்சாய் எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் உற்பத்தி கட்டமைப்புகளை தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஹோர்மூஸ் நீரிணையை திறக்க 48 மணி நேர காலக்கெடுவையும் ட்ரம்ப் விதித்திருந்தார். மறுபுறத்தில் அமெரிக்காவை எச்சரித்திருந்த ஈரான் தங்களது மின்நிலையங்களை தாக்கினால் அவற்றை சீரமைக்கும் வரை நீரிணையை திறக்க மாட்டோம் என்று அறிவித்திருந்தது.
அத்துடன் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளின் அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளும் தாக்கப்படும் என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இந்த சூழலில் தான் விதித்த 48 மணி நேர காலக்கேடு முடியும் தருவாயில் திடீரென ஐந்து நாட்கள் சண்டை நிறுத்தத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளமான ட்ரூத்தில் பதிவேட்டுள்ள அதிபற்றம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் கடந்த இரண்டு நாட்களாக பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையின் பயனாக தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
ஆனால் இதுபோன்ற எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ள ஈரான் தங்களின் உறுதியான எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பின்வாங்கி விட்டார் என்று தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டு கடற்கரைகளையோ தீவுகளையோ அமெரிக்கா தாக்கினால் பாரசீக வளைகுடா கடல் பகுதியில் உள்ள அனைத்து தகவல் தொடர்பு வழிகளையும் அழித்து விடுவோம் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த தகவல் தொடர்புகள் என்பவை தொலைத்தொடர்பு வலை அமைப்புகள் செயற்கை கோள் இணைப்புகள் இணையம் மற்றும் கடலுக்கடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் ஆகும்.
இதையும் படிங்க: என்னது..!! தங்க நாணயத்தில் டிரம்ப் உருவமா..?? தீவிரம் காட்டும் அமெரிக்க அரசு.. வெடித்தது புதிய சர்ச்சை..!!
மறுபுறத்தில் ஹோர்மஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்களிடம் 18 கோடிய 80 லட்சம் ரூபாயை சுங்க கட்டணமாக வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முற்றிலுமாக கையகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய மாணவர்களுக்கான அமெரிக்க கல்வி விசா 69% சரிவு..!! காரணமே டிரம்ப் தான்..!!