ஈரான் - இஸ்ரேல் 12 நாட்களாக நடந்து வந்த போரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்தார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நீங்கி, உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ள நிலையில், ஈரானை குறைத்து மதிப்பிட்டால் மீண்டும் போரில் இறக்கத் தயங்கமாட்டோம் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

தெஹ்ரான், ஈரான் - இஸ்ரேலுடனான 12 நாள் போரின் போது தங்களது மண்ணைக் காப்பதற்காக ஈரான் வீரர்கள் தங்களது ரத்தத்தையேக் கொடுத்ததாகவும், ஆனால் அரசு சார்பில் அவர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்தி மரியாதை செய்யவில்லை என்றும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார். மேலும் ஈரான் வரலாற்றிலேயே சரணடைதல் என்ற வார்த்தைக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தணியாத போர்ப்பதற்றம்.. ஈரானில் இருந்து டெல்லி வந்த மேலும் 272 இந்தியர்கள்..!

தொடர்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாங்கள் எங்கள் மதிப்பை அறிவோம், எங்கள் சுதந்திரத்தை மதிக்கிறோம், எங்கள் விதியை வேறு யாரும் தீர்மானிக்க அனுமதிக்க மாட்டோம். ஜனாதிபதி டிரம்ப் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதில் உண்மையாக இருந்தால், அவர் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா காமேனியை அவமதிக்கும் வகையில் பேசி, அவரது மில்லியன் கணக்கான இதயப்பூர்வமான ஆதரவாளர்களை காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஈரான் ஏவுகணைகளால் தாக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் தனது அப்பாவான அமெரிக்காவிடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உலகுக் காட்டிய மகத்தான மற்றும் சக்திவாய்ந்தவர்கள் ஈரானிய மக்கள் என்றும், அவர்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் அவமானங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் மோசமான தவறுகளுக்கு வழிவகுத்தால், ஈரான் அதன் உண்மையான திறன்களை வெளிப்படுத்தத் தயங்காது, இது ஈரானின் சக்தி குறித்த எந்தவொரு மாயையையும் நிச்சயமாக முடிவுக்குக் கொண்டுவரும் என அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு "SPY" வேலை.. 3 பேருக்கு தூக்கு தண்டனை.. அதிரடியில் இறங்கிய ஈரான்..!