இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுத்து வரக்கூடிய நிலையில் உலகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை என்பது நிலவி வருகிறது. அங்க இருக்கக்கூடிய அந்த கட்டிடங்கள் அங்க இருக்கக்கூடிய மக்கள் மீது எல்லாம் அந்த போர் விமானங்கள் எல்லாம் ஏவப்படுகிறது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதம் அதாவது நாளொன்றுக்கு 2 கோடி பேரல்கள் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இந்தியா தனது 50 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்கிறது.
இந்நிலையில் தான் ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கிறது. இது ஒரு முக்கியமான கடற்சார் வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக பாரசீக வளைகுடாவையும், அரேபிய கடலையும் இணைக்கக்கூடிய ஒரு பகுதியாக இருக்கிறது. உலகளவில் கடல் மார்க்கமாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் சுமார் 20 முதல் 30% இந்த நீரிணை வழியாகதான் செல்ல முடியும்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீராகம், குவைத், ஈராக் போன்ற நாடுகளும் நாடுகளின் எண்ணை ஏற்றுமதியும் இந்த நீரிணையைத் தான் அதிகமாக சார்ந்துள்ளது. ஹார்மூஸ் நீரிநிலை பகுதி என்பது ஈரானுடைய முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அமெரிக்கா ஈரான் பதற்றம் அதிகரிக்கும் காலங்களில் நீரிணையை மூடுவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுப்பது வழக்கம். அந்த வகையில் தான் தற்போதும் ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. இது மூடப்பட்டதால் உலக அளவில் அந்த கச்சா எண்ணெயினுடைய விலை கடுமையாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!
அதேபோல அமெரிக்க கடற்படை மற்றும் ஈரான் கடற்படை இப்பகுதியில் அடிக்கடி கண்காணிப்பு செய்து வருகிறார்கள். இருந்தாலுமே கூட இந்த சிறிய முடிவு உலக அளவில் பெரிய பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய நிலை என்பது தற்போது ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வரக்கூடிய நிலையில், ஈரான் முக்கிய நீர்வழி தடமாக பார்க்கக்கூடிய ஹார்மூஸ் நீரணையை தற்போது மூடி இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெயுடைய விலை என்பது கடுமையாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகத்தின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாகத்தான் நடக்கிறது. 30% எரிவாயுவும் இந்த வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நீரிணையை மூடினால் கச்சா எண்ணெய் கப்பல்கள் எரிவாயு கப்பல்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருக்கும். அதனால் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்கள் வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 20 மில்லியன் பேரல்கள் அதாவது 2 கோடி பேரல்கள் அளவுக்கான கச்சா எண்ணை இந்த நீரணி வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. உலகலாவிய அளவில் இதன் மதிப்பு ஒரு ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் என்று அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் தரவு தெரிவிக்கிறது.
2024ஆம் ஆண்டை வைத்து பார்த்தோம் என்றால், 84% கச்சா எண்ணெய், உள்ளிட்ட கப்பல் போக்குவரத்து, இந்த நீரிணி வழியாகத்தான் ஆசிய நாட்டு சந்தைகளுக்கு செல்கிறது. 83% எறிவாயு வர்த்தகமும் இந்த வழியாகத்தான் ஆசிய நாடுகளை சென்றடைகின்றன. இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரிய நாடுகள் மொத்தம் 69% கச்சா எண்ணையை இந்த நீரிணை வழியாக இறக்குமதி செய்கின்றன. இந்த நீரிணையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எரிவாயு விலை மிகவும் அதிகமாக கூடிய வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: பழிக்குப்பழி..! இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்? குறி வைத்த ஈரான்..!!