ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தீவு ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியை கையாள்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “அமெரிக்கா கார்க் தீவில் உள்ள அனைத்து ராணுவ இலக்குகளையும் முழுமையாக அழித்துவிட்டது. எண்ணெய் உள்கட்டமைப்புகளை தாக்கவில்லை, ஆனால் ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாக செல்ல இடையூறு ஏற்பட்டால் உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்” என்று எச்சரித்தார்.
உலகம் இதுவரை கண்டிராத சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளன என்றும், ஈரானால் எந்த இலக்கையும் பாதுகாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க சதி! கண்ணி வெடி வைக்கும் படகுகள்! தாக்கி அழிக்கும் அமெரிக்கா!

இதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை சாம்பல் மேடாக மாற்றுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அறிவிப்பால் கோபமடைந்த ஈரான், தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இதனால் உலக வர்த்தகம், குறிப்பாக எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பல்களை தடுப்பதால் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்கா தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ஈரானின் பதிலடி எப்போது, எப்படி இருக்கும் என உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. போர் தொடரும் வரை மத்திய கிழக்கு பதற்றம் உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது பயங்கர தாக்குதல்!! பழிக்கு பழி தீர்க்கும் ஈரான்!! அதிகரிக்கும் பதற்றம்!