1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஒரு தனி நாடாக உருவாக்கப்பட்டவுடன், அமெரிக்கா அதை முதல் நாடாக அங்கீகரித்தது. இதுவே இரு நாடுகளுக்கிடையிலான உறவின் அடித்தளமாக அமைந்தது. பனிப்போர் காலத்தில், இஸ்ரேல் மத்திய கிழக்கில் குறிப்பாக சோவியத் ஆதரவு பெற்ற அரபு நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இருந்தது.

இரு நாடுகளும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் புலனாய்வு தொழில்நுட்பங்களில் ஒத்துழைக்கின்றன. மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் கூட்டு பயிற்சிகளில் பங்கேற்கின்றன, இது இரு நாடுகளின் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது. இரு நாடுகளும் 1985 இல் கையெழுத்திட்ட Free Trade Agreement மூலம் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: புர்கா போடலனா அடிச்சு சாவடிக்கிறாங்க.. இப்படியே போனா 3வது உலகப் போர் கன்ஃபார்ம்! எச்சரிக்கும் கிருஷ்ணசாமி!!

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து ஈரானிய வெளியுறவு துறை அமைச்சர் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி என்றும் கடந்த 30 ஆண்டுகளாக அவர் தனது போர்களை நடத்த அமெரிக்க ஜனாதிபதிகளை ஏமாற்றியுள்ளார் எனவும் கூறியுள்ளார். தான் போரை நிறுத்த முயற்சிப்பதாக நெதன்யாகு பேசி வரும் நிலையில், ஈரான் பிரதமரின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!