ஈரான் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இதில் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் நேற்று நள்ளிரவு முதல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடியது. இதனால் ஈரானில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து ஈரானுக்குமான விமான சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

ஈரானில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர். படிப்புக்காக, வேலைக்காக இந்தியர்கள் ஈரானுக்கு சென்றிருந்தனர். தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக அவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் முடிவு செய்துள்ளது. அதன்படி போருக்கு நடுவே இந்தியர்களை வெளியேற்ற வசதியாக ஈரான் தனது வான்வெளி பரப்பை திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று ஈரானின் மஷாத் நகரில் இருந்து விமானங்கள் டெல்லிக்கு புறப்படுகிறது.

மொத்தம் 1,000 இந்தியர்கள் இன்று ஈரானில் இருந்து டெல்லி வர உள்ளனர். இவர்கள் மாஹான் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தின் விமானங்களில் மஷாத் நகரில் இருந்து டெல்லி அழைத்து வரப்படுகின்றனர். இந்த மஹான் ஏர்லைன்ஸ் ஈரான் தலைநகர் டெஹ்ரானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான விமான நிறுவனமாகும். இதனை ஈரானும் உறுதி செய்துள்ளது. ஈரானின் இந்த செயல் இந்தியாவை நெகிழ வைத்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள்.... புது குண்டை தூக்கிப்போட்ட அமித்ஷா!!