மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதற்கு பதிலடியாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது நிச்சயம் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டது. தற்போது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ட்ரோன்களை ஏவியது ஈரான்.ஈரானிய நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலிய பிரதேசங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஐந்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: கொஞ்சம் இருங்க பாய்..! குலை நடுங்க வைக்கும் ஈரான்.. அலறி துடிக்கும் இஸ்ரேல்..!

அதிரடியாக தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்த ஈரான் மீது முன்கூட்டியே இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய நிலையில், அணு உலைகள் ராணுவ தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கியது. இதில் ஈரானிய புரட்சி படையின் தளபதி உசைன் சரோமி உட்பட 78 பேர் பலியானதாகவும் 320 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக தான் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது.

இந்த நிலையில் பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, மத்திய காலத்தில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நடப்பு சூழலை கருத்தில் கொண்டு ஈரானில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொஞ்சம் இருங்க பாய்..! குலை நடுங்க வைக்கும் ஈரான்.. அலறி துடிக்கும் இஸ்ரேல்..!