இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள், இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்டவை, ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதற்கு பதிலடியாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது நிச்சயம் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டது. தற்போது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் தனது அணு மற்றும் இராணுவ நிறுவல்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேலை நோக்கி 150க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது ஈரான். ஈரானிய நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலிய பிரதேசங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.
இதையும் படிங்க: இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் முக்கியப்புள்ளி உயிரிழப்பு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இது தொடர்பாக ஈரான் பகிர்ந்துள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் அறிக்கையில், ஈரான் இஸ்லாமிய குடியரசின் பகுதிகளில் காட்டுமிராண்டித்தனமான, பயங்கரவாத மற்றும் குழந்தைகளைக் கொல்லும் சியோனிச ஆட்சியால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் குற்றவியல் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக தற்காப்பு மற்றும் தாக்குதல் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஒரு வலிமையான மற்றும் துல்லியமான பதிலடியைத் தொடங்கியுள்ளது.

தெய்வீக சக்தியை நம்பியிருப்பதன் மூலமும், தளபதியின் புத்திசாலித்தனமான தலைமையின் மற்றும் உன்னதமான ஈரானிய மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கை மற்றும் ஆதரவுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அபகரிக்கும் சியோனிச ஆட்சியின் இராணுவ மையங்கள் மற்றும் விமானத் தளங்கள் மீது நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தொடரும் பதற்றம்.. இறங்கி அடிக்கும் இஸ்ரேல்.. சொல்லி அடிக்க காத்திருக்கும் ஈரான்..!