இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள், இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்டவை, ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.

இதற்கு பதிலடியாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. பிறகு ஈரான் தனது அணு மற்றும் இராணுவ நிறுவல்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. நடுவில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் நிபந்தனையற்ற சரணடைதல் வேண்டும் என கூறினார்.

இதனை ஈரான் மறுத்து விட்டது. இரு நாடுகளும் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். அதற்கும் பேச்சுவார்த்தைக்கோ, போர் நிறுத்தம் செய்வதற்கோ எண்ணம் இல்லை என ஈரான் மறுத்து விட்டது. கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்வேறு நகரங்களை விட்டு மக்கள் வெளியேறினர்.

அண்டை நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவரவர் தாயகம் திரும்பினர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வலியுறுத்தி வந்த நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் 12 நாட்களாக நடைபெற்ற போரை நிறுத்துவதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது. போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், ஈரானும் தற்போது அறிவித்துள்ளது.

போர் நிறுத்தம் இல்லை என முதலில் கூறிய ஈரான் தற்போது போரை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற தகவல் வெளியான பின்பும் இஸ்ரேல் மீது நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.