இஸ்ரேலின் BAT YAM நகரை குறி வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குடியிருப்புகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் குடியிருப்புகள் சிதிலமடைந்து காட்சியளிக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஈரான் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரானுடன் இணைந்து இஸ்ரேலை தாக்குவோம் என ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். பாலிஸ்ட்டிக் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதிய இஸ்ரேலை குறி வைத்து ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். சவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இனிவரும் நாட்களில் ஈரானுடன் இணைந்து தாக்குதலை நடத்தப் போவதாக ஹவுதி குழுவினர் அமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சீண்டிய இஸ்ரேல்.. சீறிய ஈரான்..! மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

இதனிடையே, ஈரான் ராணுவ தளத்திற்கு அருகில் இருக்கும் மக்களுக்கு பாரசீக மொழியில் எச்சரிக்கை வெளியிட்டது இஸ்ரேல். ஈரானில் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு திரும்ப வேண்டாம் என்று இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. கசிகிறதா அணுகதிர்வீச்சு? மக்கள் அச்சம்!!