இராஜபாளையம் பொதுமக்கள் அதிகாரிகளை அணுகினால் அவர்களிடம் மிகவும் பணிவோடும்,கணிவோடும் நடந்து கொள்ள வேண்டும், யாரிடமும் குரலை உயர்த்தி பேசக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி. கடந்த ஆட்சியில் நடந்து கொண்டது போல் விஜய் ஆட்சியில் நடந்து கொள்ளலாம் என்பதை தயவு செய்து மறந்துவிடுங்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, ஊழல் என்பதே இருக்கக் கூடாது என்பதைத்தான் முதல்வர் எங்களுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். இதற்கு முன்னால் நீங்கள் எப்படி பணியாற்றினீர்கள். எப்படி உங்களை செயல்படுத்தினார்கள் என்பது எனக்கு தேவையில்லை.
அதை நாங்கள் கேட்கப்போவதுமில்லை, எங்களுக்கு தேவையானது மக்களுக்காக ஆட்சி, கட்சியை துவங்கியபோது நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்றெல்லாம் தெரியாது. பத்திரிகையாளராக நான் மக்கள் சேவை தொடர்ந்து மேற்கொண்டுள்ளேன்.
இதையும் படிங்க: "பழனி நில மோசடி சர்ச்சை"... போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்..!!
ராஜபாளையம் மக்களுக்கு நான் கொடுத்துள்ள வாக்குறுதிகளை காப்பாற்ற அதிகாரிகளாகிய நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதல்வர் ஒரு உத்தரவு போடும்போது அதனை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தினால் மட்டுமே அத்திட்டம் மக்களை சென்றடையும்.
இது ஊழல் இல்லாத ஆட்சி, இந்த ஆட்சியில் ஊழல் என்ற ஒரு சின்ன சிந்தனை கூட வந்து விடக்கூடாது. என்னையும் சேர்த்தே சொல்லிக்கொள்கிறேன், நமக்குள் யாருக்கும் அந்த எண்ணமே இருக்க கூடாது. நகராட்சி மாநகராட்சிக்கு அதிகாரிகளை பார்க்க வரும் மக்கள் நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்த மக்கள் இன்றைக்கு சட்டையை போட்டுக்கொண்டு கெத்தாக நாம் சென்றாலே வேலையாகும் என்ற எண்ணத்தை நாம் கொடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சி எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும், கடந்த ஆட்சியில் நடந்து கொண்டது போல் விஜய் ஆட்சியில் நடந்து கொள்ளலாம் என்பதை தயவு செய்து மறந்துவிடுங்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் உங்களுக்கு யாராவது அழுத்தம் கொடுத்தால் அதற்கு அடிபணிந்து போய் விடாதீர்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், யாரும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை
எந்த விஷயமாக இருந்தாலும் நம்மிடம் மறைமுகம் கிடையாது. வெளிப்படைத் தன்மையோடுதான் இருக்கும். பொதுமக்கள் அதிகாரிகளை அணுகினால் அவர்களிடம் மிகவும் பணிவோடும்,கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் குரலை உயர்த்தி பேசக்கூடாது, மக்கள் புரிதல் இல்லாமல் பேசினால் கூட நீங்கள் அவரகளிடம் எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் அரசு அலுவலகங்களுக்கு சென்றால் அதிகாரிகள் என்ன வேண்டும் சொல்லுங்கள்? என கறாராக நடந்து கொண்டதாகவும், தமக்கே அப்படித்தான் நடந்ததாக கூறிய அமைச்சர், பத்திரிகையாளர் என்று போனாலும் கூட அலட்சியமாகவே நடந்து கொண்டார்கள். இனிமேல் நம்மிடம் வரவே கூடாது என நினைத்து அதிகாரிகள் செயல்பட்டார்கள். ஆனால் இனிமேல் மக்களிடத்தில் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என நான் சொல்லவில்லை நமது முதல்வர் உத்தரவே பிறப்பித்துள்ளார்.
உங்களுக்கு தெரியாமலேயே வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள். இது கடந்த ஆட்சியைப் போல் கிடையாது. உங்களைப் போன்ற படித்தவர்கள் இருக்கும் ஆட்சி. நாம் ஒன்றுபட்டு செயல்பட்டால் நமது முதல்வர் விரும்புவது மக்களிடத்தில் செல்லும். ஊழல் இல்லா ஆட்சியை கண்டிப்பாக நம்மால் கொடுக்க முடியும், அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தருவீர்கள் என நம்புகிறேன்.
நீங்கள் என்னை ஒரு அமைச்சராக பார்க்க வேண்டாம், உங்கள் வீட்டு சகோதரியாக பாவித்து உங்களுக்கும் ஏதேனும் கஷ்டம் வந்தால் என்னிடம் வெளிப்படையாக தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்க ஒளிஞ்சு இருக்கீங்க CM..? SORRY கேக்ககூட துணிச்சல் இல்லையா..? விளாசிய ஸ்டாலின்..!