மின்தடை காரணமாக நீட் தேர்வை எழுத முடியாமல் போனது. எனவே எங்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தேர்வை சரியாக எழுதாமல் போன மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது இருத்தரப்பு வாதங்களுக்கும் கேட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய மருத்துவ முகமை ஆகியவற்றுக்கு முக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. அதாவது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாததற்கு காரணமே இதுதான்... நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!!

மேலும் இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ முகமை உள்ளிட்டவை பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் நீட் மறுதேர்வு நிச்சயம் கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஜூன் 6 தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போர் பதற்றத்தில் மூடப்பட்ட விமான நிலையங்கள்..! முன்கூட்டியே திறக்க அதிரடி உத்தரவு..!