ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு வரவிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் ஏற்கனவே போர்க் குற்றவாளியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவர் தான் பெஞ்சமின் நெதன்யாகு. காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற தாக்குதல்களுக்கு அவரே முழுப் பொறுப்பு. சர்வதேச சமூகத்தால் தேடப்படும் குற்றவாளியான அவர், சுதந்திரமாக உலா வரக் கூடாது. மாறாக, அவர் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர். எனவே, அவர் ஐநா கூட்டத்திற்காக நியூயார்க் எல்லைக்குள் காலடி எடுத்து வைக்கும் போது அவரைக் கைது செய்யத் தேவையான சட்டப்பூர்வ உத்தேசங்களை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.

சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணையை அமல்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் முன்னணி நகரமான நியூயார்க்கின் மேயரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது, ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு முன்பாக பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், அமெரிக்க ஒன்றிய அரசு நெதன்யாகுவிற்கு ராஜதந்திரப் பாதுகாப்பு வழங்குமா அல்லது மேயரின் இந்த அதிரடித் திட்டம் அடுத்தகட்டமாக என்ன நகர்வுகளைச் சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சமணர் படுகையில் படுத்து ஆய்வு! மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விசிட்!
இதையும் படிங்க: தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமா மாஸ் வேட்டை! தனுஷ், ஜி.வி.பிரகாஷுக்கு இபிஎஸ் நெகிழ்ச்சி வாழ்த்து!