திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காகத் தான் விடுப்பு எடுத்து வந்துள்ளதாகத் தமிழ்நாடு அமைச்சர் விக்னேஷ் கோவையில் நகைச்சுவையாகப் பேட்டி அளித்துள்ளார்.
கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் படம் பார்க்க வந்த அமைச்சர் விக்னேஷ், செய்தியாளர்களைச் சந்தித்த போது தனது லீவ் பிளான் மற்றும் முதலமைச்சர் விஜய் தனக்கு விதித்த கண்டிப்பு குறித்து கலகலப்பாகப் பகிர்ந்து கொண்டார். அரசுப் பதவியில் இருப்பதால் எப்போதும் மக்களுக்கான பணிகளில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் எங்களுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். அதனால், இந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்ப்பதற்காகவே நான் இன்று முறைப்படி லீவ் போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

திரையரங்கிற்குள் படம் பார்க்கும் அந்த 3 மணி நேரம் மட்டும் அமைச்சர் என்ற பொறுப்பையெல்லாம் சற்று கழட்டி தூர வைத்துவிட்டு, தியேட்டருக்குள் விசில் அடித்து பழைய 'ரசிகராக' என்ஜாய் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், அவரோ இன்னும் அதற்கு ஒத்துக்கவில்லை, சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
இதையும் படிங்க: "எங்கண்ணன் 'V' கச்சேரி"..!! ஜனநாயகன் ரிலீஸை திருவிழா போல கொண்டாடனும்..! தவெகனருக்கு அறிவுறுத்தல்..!!
அமைச்சர் விக்னேஷ் தியேட்டரில் ரசிகர்களைப் போலத் தானும் விசில் அடித்துக் கொண்டாட முதலமைச்சரிடம் அனுமதி கேட்டுள்ள இந்த சுவாரசியமான பேட்டி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!