பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணம் வடக்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று நடந்த பயங்கர குண்டு வெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணுவ வாகனங்கள் அணி வகுத்து சென்று கொண்டிருந்தன. திடீரென சரக்கு வாகனம் ஒன்று வந்து, ராணுவ வாகனங்கள் மீது மோதியது. அப்போது தான் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ராணுவ வாகனங்கள் சிதறின. பக்கத்தில் இருந்த 2 வீடுகளும் இடிந்து விழுந்தன.

இந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அப்பாவி மக்கள் 19 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவரும் இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் இது தற்கொலை படை தாக்குதல் என்பது தெரிந்தது. இந்த தாக்குதலுக்கு ஹபிஸ் குல் பஹதூர் அமைப்பின் தற்கொலை படை பிரிவு பொறுப்பேற்றது.
இதையும் படிங்க: இந்தியாவை உலுக்கிய 3 பயங்கரவாத தாக்குதல்..! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ISIS தலைவன் காலி.. யார் இந்த சாகிப் நாச்சன்?
இது தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான்களின் ஒரு கிளை பிரிவாகும். தற்கொலை படையாக சென்றவர் சரக்கு வாகனங்கள் முழுதும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டு, ராணுவ கான்வாய் மீது மோதி வெடிக்க வைத்தார்.

இதில் தான் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 13 வீரர்கள் இறந்ததோடு, காயம் அடைந்த 10 வீரர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் எப்படி பலூச் விடுதலை ராணுவம் பெரிய தலைவலியாக இருக்கிறதோ, அதே போல் மேற்கு எல்லை முழுதும் பாகிஸ்தான் தலிபான்களின் ஆதிக்கம் பாகிஸ்தான் அரசின் நிம்மதியை கெடுக்கிறது.
இவர்கள் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை பகுதிகளில் தான் முகாமிட்டுள்ளனர். பாகிஸ்தான் தலிபான்களும் ஆப்கனை ஆட்சி செய்யும் தலிபான்களும் வேறு வேறு அமைப்பினர்.

ஆப்கனில் எப்படி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தலிபான்கள் துடித்தார்களோ, அதே போல் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பாகிஸ்தான் தலிபான்களின் கனவு. வேறு வேறு அமைப்புகள் என்றாலும், இரண்டுமே நட்பு அமைப்புகள். பாகிஸ்தான் தலிபான்களுக்கு அடைக்கலம் கொடுப்பதே ஆப்கனை ஆட்சி செய்யும் தலிபான்கள் தான்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் ராணுவமும் தான் பாகிஸ்தான் தலிபான்களின் எதிரிகள். இவர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்க சமீபத்தில் ஆப்கன் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் குண்டு வீசியது. இதற்கு ஆப்கன் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்ததோடு, பாகிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான், ஆப்கன் இடையேயான உறவு முறிந்தது. ஆப்கன் தொடர்ந்து இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது
இதையும் படிங்க: அழகான பொண்ணு வீடியோ கால் பண்ணும்.. காசு கொடுக்கும்.. பாக்., உளவாளி வலையில் விழுந்தவரின் பகீர் வாக்குமூலம்..!