இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய இராணுவம், பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல்கள் மூலம் 'ஆப்பரேஷன் சிந்தூர்' தொடங்கிய பிறகு, இப்போது பாகிஸ்தான் பதிலடி கொடுத்து இந்தியாவின் 15 நகரங்களைத் தாக்க முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்புப் பிரிவை இந்தியா அழித்து சுக்கு நூறாக்கி விட்டது.
இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடி கொடுத்து அந்நாட்டின் திட்டங்களை முறியடித்த பிறகு, பாகிஸ்தானின் விமானத் தளங்கள் இந்தியாவை எங்கிருந்து தாக்க முடியும் என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான் தனது விமானப்படையை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளது. முதல் வடக்கு விமானக் கட்டளை (பெஷாவர்), இரண்டாவது மத்திய விமானக் கட்டளை லாகூர். மூன்றாவது தெற்கு விமானக் கட்டளை கராச்சி. பாகிஸ்தான் விமானப்படையில் மொத்தம் 21 விமான நிலையங்கள் உள்ளன.
தளம் மஸ்ரூர்: பாகிஸ்தான் விமானப்படையின் மஸ்ரூர் தளம் கராச்சியில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய விமான தளங்களில் ஒன்று. தெற்கு விமான கட்டளை இங்கு அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!
தளம் பைசல்: பாகிஸ்தான் விமானப்படையின் பைசல் தளமும் கராச்சியில் அமைந்துள்ளது. இது தெற்கு விமான கட்டளை மற்றும் பாகிஸ்தானின் விமான போர் கல்லூரியின் தலைமையகமாக செயல்படுகிறது.

தளம் முஷாப்: முஷாப் விமானப்படை தளம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சர்கோதாவில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தானின் ஒரு முக்கிய தளம், இதில் போர் பயிற்சி பள்ளி உள்ளது.
தளம் ரஃபிகி: பாகிஸ்தான் விமானப்படையின் ரஃபிகி விமான தளம் ஷோர்கோட்டில் அமைந்துள்ளது. இது மத்திய விமானப்படை கட்டளையின் கீழ் தாக்குதல்களை நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் பெஷாவர் தளம் பெஷாவரில் அமைந்துள்ளது. இது வடக்கு விமானப்படை கட்டளையின் கீழ் தாக்குதல்களை நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை தளத்தின், மின்ஹாஸ் என்பது பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள அட்டாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு விமானப்படை தளம். சிஏசி/பிஏசி ஜெ எஃப்-17 தண்டர், பாக் எம் எஃப்ஐ-17 முஷாக், ஹொண்டு ஜெஎல்-8 போன்ற விமானங்களை உற்பத்தி செய்யும் மின்ஹாஸ் ஏர்பேஸஸில் பாகிஸ்தான் வான்வெளி வளாகம் அமைந்துள்ளது.
பொது தலைமையகம் ராவல்பிண்டி கண்டோன்மென்ட்டில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகம் ஆகும்.

பாகிஸ்தான் விமானப்படை வளாகம் என்பது பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கம்ராவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு விண்வெளி உற்பத்தியாளர் ஆகும். பாகிஸ்தான் விமானப்படை சார்பாக 1971 இல் நிறுவப்பட்ட பாகிஸ்தான் இராணுவத்திற்கான விமானங்கள், விமானவியல் அமைப்புகளை வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்கிறது. இது பொதுமக்கள் விமானங்களுக்கும் அதன் சேவைகளை வழங்குகிறது.
சிறப்பு சேவைகள் பிரிவு தளம் கல்லார் கஹாரில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தான் விமானப்படையின் சிறப்பு செயல்பாட்டுப் படை. இது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, தீயணைப்பு ஆதரவு, இரகசிய பயங்கரவாத எதிர்ப்பு அல்லது கடுமையான சூழல்களில் கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சிறப்பு சேவைகள், பணிகளில் சிறப்பு வாய்ந்தது.
பாகிஸ்தான் கடற்படை தளங்கள் கராச்சி, பிற கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளன. பாகிஸ்தான் கடற்படை அரேபிய கடல், ஓமன் வளைகுடாவில் பாகிஸ்தானின் கடற்கரையோரத்தில் செயல்படுகிறது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 1947-ல் இது நிறுவப்பட்டது. பாகிஸ்தானின் கடல் எல்லைகளை எந்தவொரு வெளிப்புற எதிரி தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பதே பாகிஸ்தான் கடற்படையின் முதல் பங்கு.

இந்தியாவில் பாகிஸ்தான் எங்கு தோல்வியுற்ற தாக்குதல்களை நடத்தியது தெரியுமா? ஸ்ரீநகர், அமிர்தசரஸ், பதிண்டா, அவந்திபுரா, பதான்கோட், ஜம்மு, கபுர்தலா, லூதியானா, ஜலந்தர், ஆதம்பூர், பலோடி, சண்டிகர், நல், உத்தரலாய் மற்றும் பூஜ் போன்ற ராணுவ தளங்களை குறிவைக்க பாகிஸ்தான் முயற்சித்தது. பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல்களையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முற்றிலுமாக முறியடித்தது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
இதையும் படிங்க: இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. பாகிஸ்தான் தாக்கினால் சும்மா விடமாட்டோம்.. ஜெய்சங்கர் எச்சரிக்கை!!