ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ராணுவ தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு உட்பட பல அதிரடி முடிவுகளை எடுத்தது. அதில் ஒரு நடவடிக்கையாக, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்தது. மேலும், அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கான விளைவுகளை இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது. பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் மே 10 ஆம் தேதி முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. கடந்த 12ம் தேதி இருநாடுகளிடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தப்பித்தது இதனால் தான்... இல்லைனா? ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!!

இருப்பினும், சிந்து நதி நீரை திறந்து விடப்போவதில்லை என்ற முடிவில் இருந்து இந்தியா மாறவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்த நிலையில், சிந்து நதி நீரை மீண்டும் திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சி வருகிறது. எனினும் இந்தியா தனது எண்ணத்தில் உறுதியாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

1998 மே 28ம் தேதி பாகிஸ்தான் நடத்திய அணு ஆயுத சோதனை வெற்றி பெற்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மே 28ம் தேதியை பாகிஸ்தான் கொண்டாடி வருகிறது. இந்த வருடமும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
அதே நாளில் கராச்சி ஏர்போர்ட் வந்த பாகிஸ்தானின் பிரபல நடிகை ஹினா கவாஜா பயாத், அங்கு கழிவறையில் கூட தண்ணீர் இல்லாததை கண்டு அதிர்ந்து போனார். இப்படியொரு நிலைமையில் அணு ஆயுத சோதனையை நினைத்து கொண்டாடுவது தேவைதானா’ என்று அரசை அவர் வசைபாடினார்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாவில் நடிகை ஹினா கவாஜா வெளியிட்ட வீடியோவில் கூறியது ; இந்த நாளில் நாட்டை நினைத்து நாம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் நான் இப்போது நிற்கும் கராச்சி ஏர்போர்ட்டில் தண்ணீர் இல்லை. இத்தனைக்கும் இது இன்டர்நேஷனல் ஏர்போர்ட். மக்கள் நமாஸ் செய்ய தண்ணீர் இல்லை. குழந்தைகள் பாத்ரூம் போக கூட தண்ணீர் இல்லை.
இது வெட்கக்கேடானது. பெரிய திட்டம் கொண்டு வந்து விட்டோம். வளர்ச்சி பணிகளை செய்கிறோம் என்று பெருமை பேசுகிறோம். ஆனால் அடிப்படை வசதி கூட இல்லையே. இதை யார் செய்து கொடுப்பது?

நம் ஏர்போர்ட்களும், அரசு நிர்வாகங்களும் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஆனால் யாரும் பொறுப்பேற்க விரும்பவில்லை. மோசமான சேவை, மோசமான பராமரிப்பு பணி, நீர்வாக சீர்கேடு நிறைந்த இடத்தை ஒரு நாடாக எப்படி ஏற்றுக்கொள்ள தொடங்கினோம்? எப்போதும் தவறுகளை நியாயப்படுத்தவும், சாதாரண மக்களின் தேவையை புரிந்து கொள்ளாமல் தேவையற்ற வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
கொண்டாட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு, நமக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நேரம் என்று பாகிஸ்தான் அரசை லெஃப்ட் அண்டு ரைட் வாங்கி இருக்கிறார் அந்நாட்டு நடிகை ஹினா கவாஜா.
இதையும் படிங்க: முன்னாள் காங்., அமைச்சரின் உதவியாளர் கைது... பாக்.,க்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு; வெளியான முக்கிய தகவல்!!