ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் பதட்டமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்க விமானங்கள் ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. இதில் அவர்களது அணுசக்தி மையங்கள் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டது. இந்நிலையில இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் ஈரான் மீது தொடர்ந்து இன்று தலைநகர் தெஹரான் மீது கூட தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் அமெரிக்க அதிபரின் செயலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஒரு பக்கம் அமைதி பேச்சு வார்த்தை என்று கூறிக்கொண்டே மறுபுறம் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஈரான் நிதி அமைச்சருடனான ஆலோசனையின் போது, ஈரானுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற விஷயம் குறித்து ஆலோசனை நடத்தியபோது இந்த கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அது மட்டுமல்ல இந்த விவகாரத்தால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவக்கூடாது. எனவே அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தான் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: விஷம், விஷம் அம்புட்டும் விஷம்... இஸ்ரேலை பிடரியிலேயே போட்ட துருக்கி...!

அது மட்டுமல்ல ஈரானுக்கு தேவையான ஈரான் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஈரான் மட்டுமல்லாது அதேபோல இஸ்ரேல் பிரதமருடனும் பேச இருப்பதாக கூறியிருக்கிறார். அது தவிர வளைகுடா நாடுகளின் பிரதமர்களுடனும் பேசி, இந்த போர் பதற்றத்தை முழுமையாக தணிக்க தேவையான நடவடிக்கைகளையும், அமைதி பேச்சு வார்த்தை மூலம் அனைத்து விஷயங்களுக்கும் தீர்வு காண வேண்டும் இதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா எடுக்கும் என்றும் தெரிவித்துள்ள புதின், ரஷ்யா எப்போதுமே நீதியின் பக்கம் நிற்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு!