இஸ்லாமியர்கள் அனைவரும் ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்வது வழக்கம். தற்போது ஜூன் முதல் வாரத்தில் ஹஜ் யாத்திரை செல்வது தொடங்கியுள்ள நிலையில், மெக்கா, மதீனா ஆகிய இரு இடங்களுக்கும் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் வருகை புரிவர். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இதனிடையே மெக்கா, மதீனா அமைந்துள்ள சவுதி அரேபியாயில் அந்நாட்டு அரசு, இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், அல்ஜீரியா, இந்தோனேசியா, எகிப்து, ஏமன், ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், துனிசியா ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த மே மாதம் முதல் இந்த ரூல்ஸ் அமல்படுத்தப்பட்டது. ஒர்க் விசா தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்டம் காட்டும் கொரோனா.. 6 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. மக்களே உஷார்..!

உரிய ஹஜ் விசா இல்லாதவர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவுதியில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட விசா மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், கடந்த காலங்களில் ஒர்க் விசா உள்ளிட்ட இதர விசாக்களை பெற்றுக் கொண்டு பலரும் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

இதனால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு மரணங்களும் ஏற்பட்டன, இதைத் தடுக்கவே இப்போது விசா தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தடை எப்போது நீக்கப்படும் என்பது பற்றியும் உறுதியான தகவல் எதுவும் இல்லை. இதனால் வேலை தேடும் வெளிநாட்டினர் மட்டுமின்றி, சவுதியில் உள்ள உரிமையாளர்களும் கூட குழப்பத்தில் உள்ளனர். அதேநேரம் இதனால் பொருளாதார பாதிப்புகள் ஏற்படலாம் என்ற கவலையும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!