சிங்கப்பூர் கப்பலில் போதை மருந்து கடத்தியதாக குற்றம்சாட்டி, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024 ஜூலை மாதம் முதல் இந்த 3 பேரும் இந்தோனேசிய சிறையில் உள்ளனர். இவர்கள் 3 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வரவில்லை. ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (வயது 34), கோவிந்தசாமி விமல்கந்தன் (வயது45) ஆகியோர் மரண தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இவர்கள் மூவரும் சிங்கப்பூரில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் 106 கிலோ கிரிஸ்டல் மெத் எனும் போதைப் பொருளை அக்வாரிஸ் கார்கோ கப்பலில் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 75 ஆண்டுக்கு பின் ஆரம்பப்பள்ளியில் ஒன்றிணைந்த முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..
சிங்கப்பூரில் இருந்து இந்த சரக்குக் கப்பல் புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கரிமுன் கடற்பகுதியில் போங்கார் பகுதியில் வைத்து சரக்குக் கப்பலை இந்தோனேசிய அதிகாரிகள் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

கடந்த 14ம் தேதி இந்த மூவரும் பயணித்த கப்பலின் கேப்டனை ஆஜராகி வாக்குமூலம் அளித்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், வரவாதது இந்த 3 பேருக்கும் பின்னடைவாக மாறியது என சிங்கப்பூர் வாரஏடு தப்லா தெரிவித்துள்ளது. அதன்பின் அந்த கப்பலின் கேப்டன் ஜூம் வழியாக ஆஜராகியதால், பிரதிவாதிகளால் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த முடியாமல் போனது.
தமிழர்கள் 3 பேரும் நிரபராதிகள் என நிரூபிக்க கேப்டன் வாக்குமூலம் முக்கியமாக இருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. ஆனால் அரசு தரப்பில் 3 பேருக்கும் இந்தோனேசிய சட்டப்படி மரண தண்டனை கோரப்பட்டது. தமிழர்கள் 3 பேர் தரப்பில் இந்திய சட்ட நிறுவனமான தெற்காசியா லெக்ஸ் சட்ட சேவை சார்பில் வழக்கறிஞர் ஜான் பால் ஆஜராகினார்.

இந்தோனேசிய நிறுவனம் பாம்பாங் சுப்ரியாடி நிறுவனம் தங்கள் கப்பல்மீதான குற்றச்சாட்டு பொய்யானது என வாதாடியது. சர்வதேச கடல்எல்லை சட்ட வல்லுநர் சோல்மேன் பான்டோ கூறுகையில் “ கப்பலில் என்ன நடந்தாலும் அதற்கு கேப்டன்தான் பொறுப்பேற்க வேண்டும். கப்பல் கேப்டனுக்குத் தெரியாமல் கப்பலில் பெரிய அளவிலான போதைப்பொருட்கள் ஏற்ற முடியாது. உண்மையான குற்றவாளிகள் தப்பவிடப்பட்டுள்ளனர்.
கப்பலின் கேப்டன் நேரில் விசாரணைக்கு ஆஜராகினால் இந்தியர்கள் 3 பேரும் குற்றமற்றவர்கள் என்பது உறுதியாகிவிடும். ஆனால் கேப்டன் விசாரணைக்கு நேரில் ஆஜராகாதது சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில் ஏப்ரல் 15ம் தேதி தீர்ப்பை எதிர்பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
ஒருவேளை தமிழர்கள் தரப்பில் ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், கப்பலின் கேப்டன் விசாரணைக்கு வராவிட்டாலும், தமிழர்களின் நிலை மோசமாகும்.
இதையும் படிங்க: மோடி செலவைதான் பார்ப்பீங்க.. 4 ஆண்டுகளில் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவு தெரியுமா..?