ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களிலும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய ராணுவம் லாகூர், கராச்சி நகரங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிங்க: பாத்ரூம் போக தண்ணியில்ல! இதுல இந்தியா கூட போர் ஒரு கேடா..! பாக்.-ஐ வறுத்தெடுத்த அந்நாட்டு நடிகை!
இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.

இதனிடையே ட்ரம்ப் மத்தியஸ்சம் குறித்தும், போர் நிறுத்தம் குறித்து இந்தியா - பாக்., அறிவிக்கும் முன்னரே ட்ரம்ப் அறிவித்தது குறித்தும் சர்ச்சையானது. எதிர்க்கட்சிகள் இதை விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்தியா - பாக்., சண்டையை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று அமெரிக்க அதிபர் கூறி வருகிறார்.
இதை இந்தியா மறுத்துள்ளது. சண்டையில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அதை தாங்க முடியாமல், பாகிஸ்தான் ராணுவம், சண்டையை நிறுத்துமாறு இந்தியாவிடம் கெஞ்சியது. அதை ஏற்று தாக்குதலை நிறுத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.

சண்டையை நிறுத்தியதில் மூன்றாம் தரப்பு தலையீடு ஏதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியது. ஆனால், மோதலை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று திரும்பவும் அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இந்தியா–பாகிஸ்தான் சண்டையிடுவதை நாங்கள் தடுத்துவிட்டோம். அது, அணு ஆயுத போராக மாறி பேரழிவு ஏற்பட்டு இருக்க கூடும். ஒருவருக்கெருவர் துப்பாக்கிசூடு நடத்துபவர்களுடனும், அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடியவர்களுடனும் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது என்று கூறினோம்.
இரு நாட்டு தலைவர்களும் அதை புரிந்து கொண்டதால் சண்டை நின்றுவிட்டது. அதற்காக இருநாட்டு தலைவர்கள், மற்றும் எங்கள் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். குண்டுகள் மூலம் இல்லாமல் வர்த்தகத்தின் வாயிலாக போரை நிறுத்தியதை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆனால், இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.

மற்றவர்கள் சண்டையிடுவதை தடுக்கிறோம், ஏனென்றால், மற்ற யாரையும் விட எங்களால் சிறப்பாக போரிட முடியும். எங்களிடம் உலகின் மிகப்பெரிய ராணுவம் உள்ளது. உலகின் மிகப்பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவுடன் வர்த்த ஒப்பந்தம் தொடர்பாக இப்போது பேச்சுவார்த்தை நடக்கிறது. அடுத்த வாரம் பாகிஸ்தான் பிரதிநிதிகள் வர்த்தகம் பேச வர உள்ளனர். ஒருவருக்கொருவர் போரிட விரும்பினால், அவர்களுடன் வர்த்தம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸா? பாக்., டீமா? ராகுல்காந்தி, ரேவந்த் ரெட்டியை வெளுத்து வாங்கிய பாஜக..!