இஸ்ரேலுடனான மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில் ஹார்மூஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சாய் எண்ணெய் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த நீரிணைக்கும் சர்வதேச எரிபொருள் சந்தைக்கும் என்ன தொடர்பு இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகள் உற்பத்தி செய்யும் எண்ணெயை உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய நீர்வழி பாதை தான் ஹார்மோஸ் நீரிணை. பாரசீக வளைகுடா ஓமன் வளைகுடா இணைக்கும் இந்த நீரிணையின் மிக குறுகிய பாதை வெறும் 33 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. இரு திசைகளிலும் இதன் பயண பாதை 3 கிலோமீட்ட அகலமே. இந்த குறுகிய பாதை வழியாகத்தான் உலகின் 20% எண்ணெய் நுகர்வுக்கான வர்த்தகம் நடைபெறுகிறது.

உலகிலேயே திரவ இயற்கை வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் கத்தாரும் ஹார்மோஸ் நீரிணை வழியாகவே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவுக்குமே கூட இந்த நீரிணை மிக முக்கியமானது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக மத்திய கிழக்கில் உள்ள ஈராக், சவுதி அரேபியா ஐக்கிரபீரகம், குவைத், கத்தார், ஓமன் நாடுகளிடமிருந்தே இந்தியா கச்சா எண்ணெயை வாங்குகிறது. கடந்த மாதம் இந்தியா இறக்குமதி செய்த 47% கச்சா எண்ணெய் ஹார்மோஸ் நீரிணை வழியாகவே நம்முடைய துறைமுகங்களை அடைந்தது.

இதையும் படிங்க: PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்.. துவண்டு போன தொழில்துறை.. கொந்தளித்த அன்புமணி!!
இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதுமே பிரெஞ்ச் கச்சா எண்ணெய் 7% விலை உயர்ந்து ஒரு பீப்பாய் 74 அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. நீடிக்கும் சண்டையால் ஒரு பதற்றம் என்றால் மறுபக்கம் நீரிணையை மூடப்போவதாக ஈரான் எச்சரித்திருப்பது எண்ணை விலை என்ன ஆகும் என்ற கவலை அனைவரையும் கவ்விக்கொண்டிருக்கிறது. 1980களில் ஈரான் ஈராக்கு இடையே நடந்த டேங்கர் போரின் போது கூட இந்த நீரினையை ஈரான் மூடவில்லை. மத்திய கிழக்கில் பதற்றம் உருவாகும் போதெல்லாம் நீரிணையை மூட போவதாக ஈரான் பல தருணங்களில் அறித்தும் அப்படி செய்யவில்லை.

ஆனால் நிகழ்கால சூழல் அப்படி இல்லை. செங்கடல் வழியாக சரக்குகள் கொண்டு சென்றாலும் ஏமனின் ஹவ்தி கிளர்ச்சி குழுவினர் ஹமாசுக்கு ஆதரவாக தாக்க தயாராக இருக்கின்றனர். கடந்த 2019ல் பிரிட்டன் சரக்கு கப்பலை ஹார்மோஸ் நீரிணையில் வைத்து ஈரான் சிறைபிடித்தது. மத்திய கிழக்கின் நிகழ்வுகளை உண்ணிப்பாக கவனித்து வரும் கப்பல் நிறுவனங்கள் மாற்று பாதை குறித்து சிந்திக்க தொடங்கி இருக்கின்றனவாம். இதனால் எரிப்பொருளின் விலை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!